SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க...
உலகெங்கிலும் மக்கள் டிஜிட்டல் பணபரிவர்தனைகளை தேர்வு செய்யும் வேளையில், அதை சார்ந்த மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இதனால், வங்கிகள் அனைத்தும், தங்கள் கஸ்டமர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நேரத்தில், SBI வங்கியில் புதிய மோசடி ஒன்று நடந்து வருவதாகவும், பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என Press Information Bureau எச்சரித்துள்ளது. அதன்படி, வங்கி கணக்குகளுடன், பான் கார்டை இணைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மெசேஜ் வந்தால், அதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும், அனுப்படும் லிங்க்-யை க்ளிக் செய்து, வங்கி விவரத்தை பதிவிட வேண்டாம் என்றும் எஸ்பிஐ எச்சரித்துள்ளது. இதுமட்டுமின்றி, OTP-யை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும், சந்தேகம் இருப்பின் வங்கிகளை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.