NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தென்கொரியாவில் வேலை பளு தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ரோபோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென்கொரியாவில் வேலை பளு தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ரோபோ
    ரோபோ படிக்கட்டுகளில் தடுமாறி விழுந்து உடைந்து போனது

    தென்கொரியாவில் வேலை பளு தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட ரோபோ

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 05, 2024
    05:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தென் கொரியாவின் குமி நகர சபையில், அரசு பணிக்காக நியமிக்கப்பட்ட ஒரு ரோபோ அரசு ஊழியரின் வீழ்ச்சி, நாட்டின் முதல் "ரோபோ தற்கொலை" என்று பலர் அழைக்கும் ஒரு தேசிய விவாதத்தை தற்போது தூண்டியுள்ளது.

    இச்சம்பவம் கடந்த வியாழன் மாலை 4 மணியளவில் நடந்தது.

    இது ரோபோவை பணிக்கு அமர்த்த வேண்டும் எனக்கூறும் சமூகத்தை குழப்பத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியது.

    'ரோபோ சூப்பர்வைசர்' என அழைக்கப்படும் இந்த ரோபோ, கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் தடுமாறி விழுந்து உடைந்து போனது.

    ரோபோ வினோதமாக நடந்துகொண்டதைக் கண்ட காட்சிகளை நேரில் கண்டவர்கள் விவரித்தனர். "அது சரியாக இறங்கும் நேரத்தில், ஏதோ மாட்டியிருப்பதை போல ஒரு இடத்தில் சுற்றி தொடங்கியது" என்கிறார்கள்.

    ஆய்வு 

    ரோபோவின் சிதைந்த துண்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ன

    நகர சபை அதிகாரிகள், சிதைந்த ரோபோவின் துண்டுகள் பகுப்பாய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.

    வீழ்ச்சிக்கான காரணம் தெளிவாக இல்லை என்றாலும் இந்த சம்பவம் ரோபோவின் பணிச்சுமை மற்றும் அதன் தாக்கங்கள் பற்றிய கேள்விகளைத் தூண்டியுள்ளது.

    ஆகஸ்ட் 2023 முதல் பணிபுரிந்து வரும் இந்த இயந்திர உதவியாளர் பல கலைகளில் நிபுணர் என்கிறார்கள்.

    ஆவணங்களை வழங்குவது மற்றும் நகரத்தை மேம்படுத்துவது முதல் குடியிருப்பாளர்களுக்கு தகவல்களை வழங்குவது வரை, ரோபோ அதன் சொந்த சிவில் சர்வீஸ் அதிகாரி அட்டையுடன் முழுவதுமாக நகர மண்டபத்தில் ஒரு அங்கமாக இருந்தது.

    ரோபோ காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை செய்தது. லிஃப்ட்களைப் பயன்படுத்தி தளங்களுக்கு இடையில் அயராது நகர்ந்தது என்கிறார்கள் அதிகாரிகள்.

    விமர்சனம்

    ரோபோவின் திடீர் மறைவு உள்ளூர் ஊடகங்களில் விமர்சனங்களை பெற்று வருகிறது 

    ரோபோ வெயிட்டர்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற கலிபோர்னியாவைச் சேர்ந்த பியர் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டது.

    இது தென் கொரியாவில் ஒரு முன்னோடி முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த நாடு அதிக ரோபோ பயன்பாட்டிற்கு பெயர் பெற்ற நாடாகும் - ஒவ்வொரு பத்து ஊழியர்களுக்கும் ஒரு தொழில்துறை ரோபோ என்று சர்வதேச ரோபாட்டிக்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    ரோபோவின் திடீர் மறைவு உள்ளூர் ஊடகங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

    இந்த சோகமான நிகழ்வு குமி சிட்டி கவுன்சிலின் ரோபோ தத்தெடுப்பு திட்டங்களில் இடைநிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது.

    ஆட்டோமேஷனுக்கான ஆர்வத்திற்கு பிரபலமான ஒரு நாட்டில் மறுபரிசீலனையின் ஒரு தருணத்தை இது பிரதிபலிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென் கொரியா

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    தென் கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025