NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய ரத்த பரிசோதனை முறை; இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய ரத்த பரிசோதனை முறை; இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
    புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய ரத்த பரிசோதனை முறை

    புற்றுநோய் சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய ரத்த பரிசோதனை முறை; இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 23, 2025
    05:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள கிறிஸ்டி மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தப்படும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ரத்தப் பரிசோதனை, புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் முறையை மாற்றக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    நோயாளியின் டிஎன்ஏவைப் படிப்பதன் மூலம் புற்றுநோய் சிகிச்சையை நோயாளிக்கு ஏற்ற வகையில் கொடுப்பதை இலக்கு வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இதன் மூலம், ஒவ்வொரு நபருக்கும் சிறந்த சிகிச்சையை அடையாளம் கண்டு வழங்க முடியும்.

    இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்தால், புதிய செயல்முறை இங்கிலாந்தின் தேசிய பொது சுகாதார சேவைகளின் வழக்கமான பகுதியாக மாறக்கூடும்.

    துல்லிய மருத்துவம்

    டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் ஒவ்வொருக்கும் தனிப்பட்ட சிகிச்சை முறை

    ஆராய்ச்சியில் பங்குபெற்றுள்ள முன்னணி ஆய்வாளர் டாக்டர் மேத்யூ கிரெப்ஸ், ஸ்கை நியூஸிடம் கூறுகையில், இந்த ஆராய்ச்சி பரந்த அளவிலான புற்றுநோய் நோயாளிகளுக்கு துல்லியமான மருத்துவத்தை கொண்டு வருகிறது என்றார்.

    இந்த நுட்பம் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பட்ட அணுகுமுறையை செயல்படுத்துகிறது என்று டாக்டர் கிரெப்ஸ் வலியுறுத்தினார்.

    பொதுவாக கீமோதெரபி வகை மருந்துகளுடன் சிகிச்சையளிப்பதற்குப் பதிலாக, நோயாளிக்கு அவர்களுக்கு ஏற்ற தனிப்பட்ட சிகிச்சை இதன் மூலம் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

    இது புற்றுநோய் நோயாளிகளுக்கு மரபணு மற்றும் டிஎன்ஏ சோதனை பயாப்ஸிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வழக்கமான வலி மிகுந்த முறைகளிலிருந்து விலகலைக் குறிக்கிறது.

    சோதனை

    சோதனை நோயாளியின் முடிவுகளை மேம்படுத்தக்கூடும் என எதிர்பார்ப்பு

    கிறிஸ்டி அறக்கட்டளை மற்றும் சர் பாபி ராப்சன் அறக்கட்டளையால் நிதியளிக்கப்படும் டார்கெட் நேஷனல் ஆய்வு, இந்த ஆராய்ச்சியில் 6,000 நோயாளிகளை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

    இந்த திரவ பயாப்ஸி நோயாளியின் விளைவுகளை மேம்படுத்த முடியுமா என்பதைப் பார்ப்பதே ஆராய்ச்சியின் குறிக்கோளாகும்.

    எனினும், இந்த ரத்த பரிசோதனை முறை அனைவருக்கும் வேலை செய்யாது என்று டாக்டர் கிரெப்ஸ் ஒப்புக்கொண்டார்.

    ஆனால் ஏற்கனவே மேம்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகள் மருந்து சோதனைகளுக்கு ஏற்றவாறு மாற உதவியுள்ளது என மேலும் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புற்றுநோய்
    மருத்துவம்
    அறிவியல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    புற்றுநோய்

    கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பெண்கள் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: HPV தடுப்பூசி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்  வாழ்க்கை
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் உடல்நிலை குறித்த தகவல்  பிரிட்டன்
    CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து ஒருவர் முழுதாக குணம்! மருத்துவம்

    மருத்துவம்

    நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் புதிய AI கருவி செயற்கை நுண்ணறிவு
    பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு உயர்கல்வித்துறை
    எந்த குரூப் ரத்தத்தையும், O குரூப் ரத்த வகையாக மாற்றும் பாக்டீரியா கண்டுபிடிப்பு மருத்துவ ஆராய்ச்சி
    சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் டீ அல்லது காபியைத் தவிர்க்க வேண்டும்: ICMR ஆரோக்கியம்

    அறிவியல்

    வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது இஸ்ரோவின் 'XPoSat' செயற்கைக்கோள் இஸ்ரோ
    நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம் ஆதித்யா L1
    நோபல் பரிசு பெற்ற 'கடவுள் துகள்' இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் 94 வயதில் காலமானார் நோபல் பரிசு
    ரோபோக்களுக்கு உயிருள்ள தோலை வளர்க்கும் விஞ்ஞானிகள் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025