NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / டெலிகிராம் மூலம் மோசடி.. ரூ.8.56 லட்சத்தை இழந்த புனேவைச் சேர்ந்த நபர்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெலிகிராம் மூலம் மோசடி.. ரூ.8.56 லட்சத்தை இழந்த புனேவைச் சேர்ந்த நபர்!
    ஆன்லைன் மோசடியில் சிக்கும் பயனர்கள்

    டெலிகிராம் மூலம் மோசடி.. ரூ.8.56 லட்சத்தை இழந்த புனேவைச் சேர்ந்த நபர்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 03, 2023
    01:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை எனக் கூறி புனேவைச் சேர்ந்த நபர் ஒருவரை ஏமாற்றி ரூ.8.56 லட்சத்தை மோசடி செய்திருக்கிறார் ஆன்லைன் மோசடி நபர்.

    45 வயதான புனேவைச் சேர்ந்த நிலேஷ் மோகன்லால் பாங்கிரேசா என்பவர் டெலிகிராம் மூலமாக பஞ்சாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த நான்கு பேர் தன்னைத் தொடர்பு கொண்டு மோசடி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

    முதலில் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தக் கூறியிருக்கின்றனர். பின்னர் ஆன்லைனில் ரிவ்யூ பதிவிடுவது, விளம்பரத்தைக் கிளிக் செய்வது, படிவங்களைப் பூர்த்தி செய்வது ஆகிய செயல்களை பகுதி நேர வேலை எனக்கூறி அறிமுகம் செய்திருக்கின்றனர்.

    இந்த வேலைகளுக்கான தொகையையும், பதிவுக் கட்டணத்தையும் திரும்பச் செலுத்திவிடுவோம் என அவர்கள் வாக்குறுதி அளித்து தொடர்ந்து நிலேஷிடம் இருந்து பணம் பெற்றிருக்கின்றனர்.

    ஆன்லைன் மோசடி

    டெலிகிராம் மூலம் மோசடி: 

    கிட்டத்தட்ட ரூ.8.56 லட்சத்தை அவர்களிடம் இழந்த பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார் நிலேஷ்.

    புனேயில் இதே போன்று மென்பொருள் பொறியாளர் ஒருவரை ஏமாற்றி ரூ.7.5 லட்சம் வரை ஆன்லைன் மோசடி நபர்கள் ஏமாற்றிய சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது.

    ஆன்லைன் மூலம் மோசடி செய்ய பல வழிகளிலும் மோசடி நபர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆன்லைன் பயனர்கள் இது போன்ற நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.

    யாரென்று தெரியாத நபர்களிடம் ஆன்லைன் மூலம் பழகி பணத்தை பயனர்கள் அனுப்பாமல் இருந்தாலே இது போன்ற மோசடி சம்பவங்களில் இருந்து தப்பிவிடலாம், ஆன்லைன் பயனர்களே உஷார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி
    இந்தியா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    இந்தியா

    திருமண சமத்துவம்: இந்த இக்கட்டான நிலையை உச்சநீதிமன்றத்தால் தீர்க்க முடியுமா? உச்ச நீதிமன்றம்
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரிக்கும் புதிய கார் மாடல் அறிமுகங்கள்..! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மீண்டும் குறைப்பு!  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025