NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா! 
    புதிய சாதனை படைத்த நாசா

    நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 27, 2023
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவிற்கு முன்னதாக நிலவில் நீண்ட கால இருப்பை அடைய திட்டமிட்டு வந்தது அமெரிக்காவின் நாசா. நிலவிலேயே இருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம், நம்முடைய இயற்கையான துணைக்கோள் பற்றி நிறைய தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

    நிலவில் நீண்ட கால இருப்பை சாத்தியப்பபடுத்த வேண்டுமானால், அதற்கு முதலில் நிலவில் உள்ள வளங்களைப் பயன்படுத்த நாம் தொடங்கியிருக்க வேண்டும்.

    அதனை அடைவதில் தற்போது மேலும் ஒரு படியை எடுத்து வைத்திருக்கிறது நாசா. நிலாவில் இருக்கும் மணலின் தன்மைகளைப் போலவே உருவகப்படுத்தப்பட்ட மனலில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்திருக்கின்றனர் நாசாவின் ஹவுஸ்டன் ஆய்வக விஞ்ஞானிகள்.

    மேலும், இந்த செயல்பாட்டை வெற்றிடத்தில் செய்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆக்ஸிஜனை பிரித்தெடும் செயல்பாடை விஞ்ஞானிகள் வெற்றிடத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டது இதுவே முதல் முறை.

    விண்வெளி

    நாசாவின் திட்டம் என்ன? 

    நிலவில் என்ன விதமான சூழ்நிலை இருக்குமோ, அதே போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்திருக்கிறார்கள்.

    நிலவின் மணலையொத்த மணலை அதிசக்தி வாய்ந்த லேசர் கதிர் கொண்டு சூடுபடுத்தும் போது, அதில் MSolo என்ற கருவியைக் கொண்டு கார்போன் மோனாக்ஸைடின் இருப்பைக் கண்டறிந்துள்ளனர்.

    இந்த MSolo கருவியையே அடுத்து செயல்படுத்தவிருக்கும் நிலவின் தென் துருவ திட்டங்களுக்குப் பயன்படுத்தவிருக்கிறது நாசா.

    இந்த இரண்டு திட்டங்களில் ஒன்று, நிலவின் தென்துருவங்களில் தண்ணீர் இருப்பதை ஆராய்வதற்காக அனுப்பப்படும் VIPER திட்டம். இத்திட்டமானது அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் செயல்படுத்தப்படவிருக்கிறது.

    மேலும், இந்தத் தொழில்நுட்பங்களை அடுத்து செயல்படுத்தவிருக்கும் ஆர்டிமிஸ் திட்டங்களிலும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறது நாசா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாசா
    விண்வெளி
    அமெரிக்கா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    நாசா

    நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது! உலகம்
    வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம் தொழில்நுட்பம்
    உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில் விண்வெளி
    விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை! விண்வெளி

    விண்வெளி

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இஸ்ரோ
    SpaceX Crew-6: சர்வதேச விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள் நாசா
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் இஸ்ரோ
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இஸ்ரோ

    அமெரிக்கா

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்? வைரல் செய்தி
    டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படுவாரா: அடுத்து என்ன நடக்கும் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025