NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஏலியன்களா? வானில் திரியும் விசித்திர பறக்கும் பொருள்களை ஆராய உள்ளது ஜப்பான் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏலியன்களா? வானில் திரியும் விசித்திர பறக்கும் பொருள்களை ஆராய உள்ளது ஜப்பான் 

    ஏலியன்களா? வானில் திரியும் விசித்திர பறக்கும் பொருள்களை ஆராய உள்ளது ஜப்பான் 

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2024
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள்(UFO) மற்றும் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள்(UAP) பற்றிய உலகளாவிய ஆர்வத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஜப்பானிய சட்டமியற்றுபவர்கள் ஒரு அனைத்து கட்சி குழுவைத் தொடங்கியுள்ளனர்.

    இந்த விவரிக்கப்படாத நிகழ்வுகளை விசாரிக்க பிரத்யேக அமைப்பு ஒன்றை அமைக்குமாறு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அரசாங்கத்தை வலியுறுத்துவதே இந்தக் குழுவின் முதன்மை நோக்கமாகும்.

    ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின்(எல்டிபி) நாடாளுமன்ற விவகாரத் தலைவர் யசுகாசு ஹமாடா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இக்குழுவில், எல்டிபியைச் சேர்ந்த ஷின்ஜிரோ கொய்சுமியும் பணியாற்ற உள்ளார். முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான ஷின்ஜிரோ கொய்சுமி இந்த குழுவின் பொது செயலாளர் ஆவார்.

    ஜப்பான் 

    அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்ற  UAP குழு திட்டம் 

    மே 28 அன்று நடந்த ஆயத்த கூட்டத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்த குழு, ஜூன் 6 ஆம் தேதி அதன் முதல் பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளது.

    ஜப்பானிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட UAP கள் ரகசிய ஆயுதங்களா அல்லது பிற நாடுகளின் ஆளில்லா உளவு ட்ரோன்களா என்பதை இந்த குழு விசாரிக்கும் என்று தொடக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விவரிக்கப்படாத நிகழ்வுகள் ஜப்பானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பதை தீர்மானிப்பதையே இக்குழு நோக்கமாகக் கொண்டுள்ளது.

    ஜப்பானிய UFO குழு UAP பற்றிய தகவல்களை சேகரித்து ஆய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரும். இதேபோன்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    ஜப்பான்

    மதுரை எய்ம்ஸ்: டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு  மதுரை
    ஜப்பான் நகரில் பொதுமக்கள் எக்ஸ்லேட்டர்களில் நடக்கத் தடை ரயில்கள்
    இரண்டாவது முறையாக புகுஷிமா அணு உலை கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட்டது ஜப்பான் ஜப்பான் கடல்
    ஜப்பானின் ஷிசிடோ நிறுவனத்திற்கு இந்திய தூதராக தமன்னா நியமனம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025