NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ
    சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ

    சந்திரயான்-3 திட்டத்தைத் தொடர்ந்து ஆதித்யா-L1 திட்டத்திற்குத் தயாராகும் இஸ்ரோ

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 14, 2023
    11:55 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலமானது, வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் தரையிறக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே சூரியனை ஆய்வு செய்வதற்கான 'ஆதித்யா-L1' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ.

    இந்த செயற்கைக்கோளானது தற்போது பெங்களூருவின் யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து, ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

    இது குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் தங்களது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறது இஸ்ரோ.

    இந்த ஆதித்யா-L1 திட்டம் தான் சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமாக செயல்படுத்தப்படவிருக்கிறது. 2008-ல் முதன் முதலாக இந்தத் திட்டத்திற்கான யோசனை கூறப்பட்டு, 2016-17 நிதியாண்டில் சோதனை அடிப்படையில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இஸ்ரோ

    சூரியனை ஆய்வு செய்ய, இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' திட்டம்: 

    பின்னர் 2019-ல், ஏவுதளுக்கான செலவினங்களைத் தவிர்த்து, ஆதித்யா-L1 திட்டத்திற்கு ரூ.378.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    ஆதித்யா-L1 செயற்கைக்கோளை PSLV-XL ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி, பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் பூமிக்கும் சூரியனுக்கு இடையே உள்ள L1 புள்ளியில் ஹாலோ சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தி சூரியனை ஆய்வு செய்யத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ.

    விண்வெளியின் இந்தப் பகுதியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவதன் மூலம், எந்த தடையும் இன்றி அனைத்து நேரமும் இஸ்ரோவால் சூரியனை கண்காணிக்க முடியும்.

    இதுவரை அமெரிக்காவின் நாசா மட்டுமே, சூரியனை ஆய்வு செய்வதற்கான பல திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது. நாசாவுடன் இணைந்து ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் பல திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கின்றன.

    Instagram அஞ்சல்

    இஸ்ரோவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

    Instagram post

    A post shared by isro.dos on August 14, 2023 at 11:21 am IST

    ட்விட்டர் அஞ்சல்

    இஸ்ரோவின் எக்ஸ் பதிவு:

    PSLV-C57/Aditya-L1 Mission:

    Aditya-L1, the first space-based Indian observatory to study the Sun ☀️, is getting ready for the launch.

    The satellite realised at the U R Rao Satellite Centre (URSC), Bengaluru has arrived at SDSC-SHAR, Sriharikota.

    More pics… pic.twitter.com/JSJiOBSHp1

    — ISRO (@isro) August 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    சந்திரயான் 3
    விண்வெளி
    சூரியன்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இஸ்ரோ

    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இந்தியா
    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது இந்தியா
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை விண்வெளி

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்

    விண்வெளி

    செவ்வாய் கிரகத்தில் உள்ள இடங்கள் மற்றும் பொருட்களுக்கு எப்படி பெயர் சூட்டுகின்றனர்? நாசா
    விண்வெளியில் மீண்டும் மலர்ந்த ஸின்னியா மலரின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா நாசா
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    செவ்வாய் கிரகத்தின் காலை மற்றும் மாலை வேளையின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறது நாசா நாசா

    சூரியன்

    செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்! ஜப்பான்
    முதன்முறையாக பூமி, சந்திரன் மற்றும் செவ்வாயை ஒரே நேத்தில் தாக்கிய சூரிய வெடிப்பு விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025