NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்?
    புதிய விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ

    சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 08, 2023
    04:48 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் ஜூலை மாதத்தில் மட்டும் இரண்டு விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ.

    நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான 'சந்திராயன்-3' மற்றும் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான 'ஆதித்யா-L1' ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படவிருக்கின்றன.

    இஸ்ரோவின் வரலாற்றிலேயே முதல் முறையாக சூரியனை மையமாக வைத்து செயல்படுத்தப்படும் திட்டம் ஆதித்யா-L1. இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது இஸ்ரோவுக்கு ஒரு புதிய மைல்கலாக அமையும்.

    இந்தத் திட்டத்தின் மூலம் செலுத்தப்படும் விண்கலமானது பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிமீ தொலைவில் லேக்ரேஞ்சு பாயிண்ட் 1 (L1)-ல் நிலைநிறுத்தப்பட்டு அங்கிருந்து சூரியனை கண்காணிக்கும்.

    ஏழு அறிவியல் கருவிகளைக் கொண்டு செல்லும் இந்தத் திட்டத்தை ஜூலை மாதம் இஸ்ரோ செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இஸ்ரோ

    சந்திராயன்-3: 

    2019-ல் செயல்படுத்தப்பட்ட சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்ததையடுத்து, அத்திட்டத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ.

    இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் விண்கலத்தில் ஒரு லேண்டர் அமைப்பு, ஒரு ப்ரெபல்ஷன் அமைப்பு மற்றும் ஒரு ரோவர் ஆகியவை சேர்த்து 3,900 கிலோ எடையைக் கொண்டிருக்கும்.

    நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100கிமீ மேலே லேண்டர் அமைப்பும், ப்ரொபல்ஷன் அமைப்பும் தனித்தனியே பிரிந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    ரூ.613 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் விண்கலமானது LVM3 ராக்கெட் மூலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டா மையத்திலிருந்து, ஜூலை முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படவிருக்கிறது.

    இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் லேண்டர் மற்றும் ரோவரில் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக பல்வேறு அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் நாசாவின் கருவி ஒன்றம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விண்வெளி
    இஸ்ரோ

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    விண்வெளி

    நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது! நாசா
    வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம் நாசா
    விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள் இஸ்ரோ
    உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில் நாசா

    இஸ்ரோ

    இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் தமிழ்நாட்டில் இருந்து ஏவப்பட்டது தமிழிசை சௌந்தரராஜன்
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை இந்தியா
    நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவின் புதிய விண்வெளித் திட்டம்!  விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025