NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்
    நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்

    நாளை இலக்கை அடையவிருக்கும் இந்தியாவின் 'ஆதித்யா L1' விண்கலம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jan 05, 2024
    02:28 pm

    செய்தி முன்னோட்டம்

    சூரியனை ஆய்வு செய்வதற்கா இஸ்ரோவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட 'ஆதித்யா L1' விண்கலமானது நாளை மாலை தன்னுடைய பயணத்தை நிறைவு செய்யவிருக்கிறது.

    கிட்டத்தட்ட 126 நாட்கள் வரை பயணம் செய்திருக்கும் ஆதித்யா L1 விண்கலம், நாளை மாலை 4 மணியளவில், முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் உள்ள ஹேலோ சுற்றுவட்டப்பாதையை அடையும் எனத் தெரிவித்துள்ளது இஸ்ரோ.

    ஆதித்யா L1 விண்கலமானது அதனுடைய இலக்கை அடைவதற்கு முன்பாகவே, அதில் பொருத்தப்பட்டுள்ள சூரியனை ஆய்வு செய்வதற்குத் தேவையான அறிவியல் உபகரணங்களை இஸ்ரோ சோதனை செய்து பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரோ

    முதலாம் லெக்ராஞ்சு புள்ளி: 

    விண்வெளியில் குறிப்பிட்ட இரண்டு பொருட்களுக்கு இடையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இரு பொருட்களின் ஈர்ப்பு விசையும் குறைவாக இருக்கும். அந்தப் பகுதியில் இடம் பெரும் பொருட்களானது, அந்த பிற விண்வெளிப் பொருட்களில் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படாமல் ஒரே புள்ளியிலேயே நிலைத்திருக்க முடியும்.

    அப்படியான புள்ளியையை லெக்ராஞ்சு புள்ளி என அழைக்கின்றனர். அப்படி பூமி மற்றும் சூரியனுக்கு இடையே இடம்பெற்றிருக்கும் முதலாம் லெக்ராஞ்சு புள்ளியிலேயே (L1), ஆதித்யா L1 விண்கலத்தை நிலைநிறுத்தவிருக்கிறது இஸ்ரோ.

    இந்தப் புள்ளியில் இருந்து, பிற கோள்களின் தடையின்றி அனைத்து நேரமும் ஆதித்யா L1 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் அறிவியல் உபகரணங்களால் சூரியனை ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆதித்யா L1

    இந்தத் திட்டம் ஏன் முக்கியமானது? 

    சூரிய குடும்பத்தின் மூல நட்சத்திரமான சூரியனில் இருந்து சூரிய கதிர்கள் மற்றும் கொரோனால் மாஸ் எஜெக்ஷன் என பூமியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு ஆபத்துக்கள் தோன்றக்கூடும்.

    இந்த ஆபத்துக்களானது நேரடியாக பூமியில் உள்ள உயிரினங்களுக்கு ஆபத்து இல்லை என்றாலும், நாம் பயன்படுத்தக்கூடிய மின்னணு சேவைகளுக்கு இதனால் பல்வேறு ஆபத்துக்கள் இருக்கின்றன.

    மேலும், சூரியனில் இருந்து வெளியாகும் திடீர் வெடிப்புகளால், நாம் தொலைத்தொடர்பு மற்றும் மின்னணு சேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

    எனவே, சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் இவ்வாறான ஆபத்துக்களை உடனடியாக அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், சூரியனைப் பற்றிய புரிதலை இத்திட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆதித்யா L1
    இஸ்ரோ
    இந்தியா
    விண்வெளி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஆதித்யா L1

    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் விண்வெளி
    ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்? விண்வெளி
    எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை அழித்த சூரிய புயல்களை ஆய்வு செய்ய இருக்கிறது ஆதித்யா-L1 இஸ்ரோ
    ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது 'ஆதித்யா L1' விண்வெளி

    இஸ்ரோ

    விக்ரம் லேண்டரின் '3D Anaglyph' புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் இஸ்ரோ சந்திரயான் 3
    ஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ ஆதித்யா L1
    செயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி ஆதித்யா L1
    சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது ஆதித்யா-L1 ஆதித்யா L1

    இந்தியா

    நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல் கனடா
    போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின் விளாடிமிர் புடின்
    விஜயகாந்த் உருவாக்கிய முக்கிய இயக்குனர்கள் ஒரு தொகுப்பு விஜயகாந்த்
    26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை தீவிரவாதம்

    விண்வெளி

    சந்திரயான்-3, ஆதித்யா-L1ஐ தொடர்ந்து சுக்ரயான்-1 திட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ இஸ்ரோ
    வெள்ளி கோள் குறித்த நீண்ட கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வுக் கட்டுரை அறிவியல்
    ஹபுளுக்குப் போட்டியாக புதிய விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியிருக்கும் சீனா அமெரிக்கா
    ககன்யான் திட்டம்: ஆளில்லா விமான சோதனைகளை நடத்த இருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025