NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல்
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல்
    'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 14, 2025
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானுடனான 4 நாள் தீவிர மோதலுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை ஒடிசாவின் கோபால்பூரில் உள்ள கடல்சார் துப்பாக்கிச் சூடு தளத்தில், 'பார்கவாஸ்த்ரா' என்ற உள்நாட்டு குறைந்த விலை எதிர் ட்ரோன் அமைப்பை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.

    பார்கவஸ்திராவை சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் (SDAL) வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

    இது ட்ரோன் கூட்டங்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்ப்பதில் கணிசமான முன்னேற்றத்தை குறிக்கிறது.

    இந்த எதிர்-ட்ரோன் அமைப்பில் பயன்படுத்தப்படும் மைக்ரோ ராக்கெட்டுகள் கோபால்பூரில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    விவரங்கள்

    கடுமையான சோதனைக்கு ஆட்படுத்தப்பட்ட பார்கவஸ்திரா

    மே 13 அன்று கோபால்பூரில் ராணுவ வான் பாதுகாப்பு(AAD) மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ராக்கெட்டுக்கான மூன்று சோதனைகள் நடத்தப்பட்டன.

    தலா ஒரு ராக்கெட்டை ஏவி இரண்டு சோதனைகள் நடத்தப்பட்டதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

    இரண்டு வினாடிகளுக்குள் இரண்டு ராக்கெட்டுகளை சால்வோ முறையில் ஏவுவதன் மூலம் ஒரு சோதனை நடத்தப்பட்டது.

    நான்கு ராக்கெட்டுகளும் எதிர்பார்த்தபடி செயல்பட்டன மற்றும் தேவையான ஏவுதள அளவுருக்களை அடைந்தன.

    இது பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களைத் தணிப்பதில் அதன் முன்னோடி தொழில்நுட்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

    சிறிய வான்வழி அச்சுறுத்தல்களைக் கண்டறிய 6 முதல் 10 கிமீ வரை ரேடார் வரம்பு, குறைந்த ரேடார் குறுக்குவெட்டு ட்ரோன்களை அடையாளம் காண EO/IR சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

    திறன்

    பார்கவஸ்திரத்தின் நோக்கம் மற்றும் திறன் 

    பார்கவாஸ்திரம், ட்ரோன்களை விரைவாக இடைமறித்து, திரள் ஈடுபாட்டுத் திறன் கொண்ட சிறிய, வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி உறுதியான கடினக் கொலைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தீர்வு, பல ட்ரோன்களை கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக மொபைல் பாதுகாப்பை வழங்குகிறது.

    பார்கவஸ்திரா பல அடுக்கு பாதுகாப்பினை தருகிறது.

    2.5 கிமீ வரையிலான ட்ரோன் கூட்டங்களை நடுநிலையாக்க 20 மீட்டர் கொடிய ஆரம் கொண்ட வழிகாட்டப்படாத மைக்ரோ ராக்கெட்டுகள் முதல் அடுக்கிலும், துல்லியமான இலக்குக்கான வழிகாட்டப்பட்ட மைக்ரோ ஏவுகணைகள், இரண்டாம் அடுக்கிலும் உள்ளது.

    தேவைப்படின், ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்காக ஜாமிங் மற்றும் ஸ்பூஃபிங் போன்ற Soft-kill முறைகளும் சேர்க்கப்படும்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | A new low-cost Counter Drone System in Hard Kill mode 'Bhargavastra', has been designed and developed by Solar Defence and Aerospace Limited (SDAL), signifying a substantial leap in countering the escalating threat of drone swarms. The micro rockets used in this… pic.twitter.com/qM4FWtEF43

    — ANI (@ANI) May 14, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    போர்

    சமீபத்திய

    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது? சைபர் பாதுகாப்பு

    இந்தியா

    இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங் நரேந்திர மோடி
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்திய ராணுவம்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்திய ராணுவம்

    போர்

    கியேவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 53 பேர் காயம், குழந்தைகள் மருத்துவமனை சேதம் உக்ரைன்
    ஹமாஸிடம் பணய கைதிகள் சிக்கிய ராணுவ வீரர்கள் உட்பட மூவரின் உடல்களை மீட்டது இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம் உக்ரைன்
    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025