NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு!
    ஆன்லைன் மோசடியிலும் அதிகரிக்கும் AI பயன்பாடு

    AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 02, 2023
    09:28 am

    செய்தி முன்னோட்டம்

    இணைய பாதுகாப்பு நிறுவனமான மாக்கஃபி (McAfee) ஆன்லைன் மோசடிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து ஆன்லைன் பயனர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

    உலகம் முழுவதும் ஏழு நாடுகளில் 7,058 ஆன்லைன் பயனர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. இதில் 1,010 இந்திய பயனர்களும் அடக்கம்.

    இவர்களிடம் AI உதவியுடன் செய்யப்படும் குரல்வழி ஆன்லைன் மோசடிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

    இந்திய பயனர்களில் 47% பேர் குரல்வழி ஆன்லைன் மோசடியால் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

    AI உதவியுடன் ஒருவரின் குரலை அப்படியே நகலெடுத்து, அதன் மூலம் குறிப்பிட்ட நபர் போல பேசி ஏமாற்றி பணம் பறிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள் ஆன்லைன் மோசடி நபர்கள்.

    ஆன்லைன் மோசடி

    ஆன்லைன் மோசடியிலும் AI பயன்பாடு: 

    இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட இந்திய பயனர்களில் 87% பேர் இது போன்ற ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

    ஒரு நபர் பேசிய 3 நொடி நேர ஆடியோ கிடைத்தால் போதும், AI-க்களைக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட நபரைப் போலவே ஆடியோவை உருவாக்க முடியுமாம்.

    மேலும், ஆய்வில் கலந்து கொண்ட 69% இந்தியர்களின் தங்களுக்கு நெருக்கமானவர்களின் குரலுக்கும், AI-யால் உருவாக்கப்பட்ட அதே போன்ற குரலுக்கு இடையே வித்தியாசம் காண முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

    "தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுவது ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு தான். ஆனால், அவற்றை அழிவுக்கும் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. அதைத் தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்", எனத் தெரிவித்துள்ளார் மாக்கஃபியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்டீவ் கிராப்மன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    செயற்கை நுண்ணறிவு

    டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்! சாட்ஜிபிடி
    ChatGPT-யில் வேலை இழப்பு? தைரியம் சொன்ன Infosys நிறுவனர்! சாட்ஜிபிடி
    100 பில்லியனை கடந்த மைக்ரோசாப்டின் BING - நிறுவனம் மகிழ்ச்சி! தொழில்நுட்பம்
    AI-யின் முக்கியத்தை குறிப்பிட்டு வித்தியாசமாக விளம்பரம் செய்த சோமேட்டோ! சோமாட்டோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025