NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர்
    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர்

    இந்திய UPI சேவையைப் பயன்படுத்திய ஜெர்மன் அமைச்சர்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 21, 2023
    09:38 am

    செய்தி முன்னோட்டம்

    ஜெர்மன் நாட்டின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர், வோல்கர் விஸ்ஸிங் பெங்களூருவில் உள்ள சாலையோரக் காய்கறிக் கடை ஒன்றில் யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

    இந்தக் காணொளியை இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகமே, தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

    கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி இந்தியாவில், கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் நடைபெற்ற G20 டிஜிட்டல் அமைச்சர் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காகவே இந்தியா வந்திருந்தார் ஜெர்மனியின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங்.

    அப்போது தான், இந்தியாவில் வேகமான பணப்பரிவர்த்தனை சேவையான, யுபிஐ சேவையைப் பயன்படுத்தியிருக்கிறார் அவர்.

    யுபிஐ

    யுபிஐ பற்றி ஜெர்மன் தூதரகம் பதிவிட்ட கருத்து: 

    ஜெர்மன் அமைச்சர் யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் புகைப்படம் மற்றும் காணொளியைப் பகிர்ந்திருக்கும் ஜெர்மன் தூதரகம், இந்தியாவின் யுபிஐ சேவை குறித்த தங்களது கருத்தையும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.

    அந்தப் பதிவில், "இந்தியாவில் வெற்றிக் கதைகளுள் ஒன்று இந்நாட்டின் டிஜிட்டல் கட்டமைப்பு. யுபிஐ சேவையின் மூலம், நொடிகளில் அனைவராலும் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடிகிறது.

    இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த யுபிஐ சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஜெர்மன் டிஜிட்டல் அமைச்சர் விஸ்ஸிங்கும் இந்தியாவின் யுபிஐ பயன்படுத்தி, அதன் எளிமையான பயன்பாட்டு அனுபவத்தால் கவரப்பட்டார்" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

    இலங்கை, பிரான்ஸ், யுஏஇ மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவின் யுபிஐ சேவையை தங்கள் நாட்டிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    யுபிஐ குறித்த எக்ஸ் பதிவு:

    One of India’s success story is digital infrastructure. UPI enables everybody to make transactions in seconds. Millions of Indians use it. Federal Minister for Digital and Transport @Wissing was able to experience the simplicity of UPI payments first hand and is very fascinated! pic.twitter.com/I57P8snF0C

    — German Embassy India (@GermanyinIndia) August 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுபிஐ
    இந்தியா
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    யுபிஐ

    ஒரு லட்சம் யுபிஐ மோசடிகள்.. தகவல் பகிர்ந்த நிதியமைச்சகம்! இந்தியா
    ஆதார் எண்ணைக் பயன்படுத்தி யுபிஐ கணக்கை தொடங்கும் புதிய வசதி.. எப்படி? வங்கிக் கணக்கு
    இந்தியாவின் UPI முறை பிரான்ஸின் லைராவுடன் இணைக்கப்படுமா? பிரான்ஸ்
    இந்தியர்கள் இனி பிரான்சிலும் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் பிரான்ஸ்

    இந்தியா

    தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா அமித்ஷா
    'நாங்கள் அமைதியை விரும்புபவர்கள் தான், ஆனால்' : சுதந்திர தின உரையில் பன்ச் வைத்த ராஜ்நாத் சிங் ராஜ்நாத் சிங்
    ஒவ்வொரு இந்தியரின் குரலாக விளங்கும் பாரத மாதா; ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து ராகுல் காந்தி
    2014 முதல் 2023 வரை : சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அணிந்த விதவிதமான தலைப்பாகைகள் பிரதமர் மோடி

    தொழில்நுட்பம்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 19-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மே 20-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    பறக்கும் மின் டாக்ஸி.. வடிவமைப்புக்கான ஒப்புதலைப் பெற்றது ePlane Company இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025