NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்
    உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்

    உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 31, 2023
    04:22 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆன்லைன் மோசடிகளுக்கு அளவுகோளே இல்லை என்ற வகையில், உச்சநீதிமன்றத்தின் பெயரையே பயன்படுத்தி ஆன்லைன் மோசடி ஒன்று நிகழ்த்தப்பட்டு வருகிறது.

    உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட வலைதளப்பக்கங்களைப் பயன்படுத்தி, இணையப்பயனாளர்களிடம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்களைக் கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள்.

    (http://cbins/scigv.com) மற்றும் (https://cbins.scigv.com/offence) ஆகிய இணைப்புகளில் உச்சநீதிமன்றத்தின் பெயரால் செயல்படும் இணையப்பக்கங்கள் இரண்டுமே மோசடி இணையப்பக்கங்களே. இவற்றில், இணையப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.

    தினமும் உச்சநீதிமன்றத்தின் இணையப்பக்கங்களை உபயோகிப்பவர்கள் கூட கண்டறிய முடியாத வகையில், அதிகாரப்பூர்வ உச்சநீதிமன்ற வலைத்தளப் பக்கத்தின் நகலாக போலியை வடிவமைத்திருக்கிறார்கள்.

    ஆன்லைன் மோசடி

    எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட உச்சநீதிமன்றம்: 

    பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இந்த ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

    அந்த அறிவிப்பில், (www.sci.gov.in) என்பது தான் அதிகாரப்பூர்வ உச்சநீதிமன்ற வலைத்தளப் பக்கம் எனவும், இதனைத் தவிர்த்து பிற மோசடி இணையப்பக்கங்களில் தனிப்பட்ட தகவல்களைக் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறது.

    மேலும், உச்சநீதிமன்றத்திலிருந்து பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கித் தகவல்களையோ எந்தக் காரணம் கொண்டு கேட்க மாட்டோம் எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

    இந்த ஆன்லைன் மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களுடைய பாஸ்வேர்டுகளை மாற்றக் கோரியும், சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகக்கோரியும் தங்களுடைய அறிவிப்பில் அறிவுறுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் மோசடி
    சைபர் கிரைம்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025