NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்
    உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்
    தொழில்நுட்பம்

    உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்

    எழுதியவர் Prasanna Venkatesh
    August 31, 2023 | 04:22 pm 1 நிமிட வாசிப்பு
    உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்
    உச்சநீதிமன்றத்தின் பெயரிலேயே ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்

    ஆன்லைன் மோசடிகளுக்கு அளவுகோளே இல்லை என்ற வகையில், உச்சநீதிமன்றத்தின் பெயரையே பயன்படுத்தி ஆன்லைன் மோசடி ஒன்று நிகழ்த்தப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கங்களைப் போலவே வடிவமைக்கப்பட்ட வலைதளப்பக்கங்களைப் பயன்படுத்தி, இணையப்பயனாளர்களிடம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்களைக் கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். (http://cbins/scigv.com) மற்றும் (https://cbins.scigv.com/offence) ஆகிய இணைப்புகளில் உச்சநீதிமன்றத்தின் பெயரால் செயல்படும் இணையப்பக்கங்கள் இரண்டுமே மோசடி இணையப்பக்கங்களே. இவற்றில், இணையப் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. தினமும் உச்சநீதிமன்றத்தின் இணையப்பக்கங்களை உபயோகிப்பவர்கள் கூட கண்டறிய முடியாத வகையில், அதிகாரப்பூர்வ உச்சநீதிமன்ற வலைத்தளப் பக்கத்தின் நகலாக போலியை வடிவமைத்திருக்கிறார்கள்.

    எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்ட உச்சநீதிமன்றம்: 

    பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இந்த ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். அந்த அறிவிப்பில், (www.sci.gov.in) என்பது தான் அதிகாரப்பூர்வ உச்சநீதிமன்ற வலைத்தளப் பக்கம் எனவும், இதனைத் தவிர்த்து பிற மோசடி இணையப்பக்கங்களில் தனிப்பட்ட தகவல்களைக் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறது. மேலும், உச்சநீதிமன்றத்திலிருந்து பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கித் தகவல்களையோ எந்தக் காரணம் கொண்டு கேட்க மாட்டோம் எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த ஆன்லைன் மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களுடைய பாஸ்வேர்டுகளை மாற்றக் கோரியும், சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகக்கோரியும் தங்களுடைய அறிவிப்பில் அறிவுறுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆன்லைன் மோசடி
    சைபர் கிரைம்

    ஆன்லைன் மோசடி

    ஆன்லைன் கடன்: இதையெல்லாம் கவனிக்க மறக்காதீர்கள் கடன்
    சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம் இந்தியா
    15,000 பேர், 700 கோடி ரூபாய்.. பெரிய அளவில் நடத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் மோசடி சீனா
    'பிங்க் நிற வாட்ஸ்அப் செயலி' மூலம் தகவல்களை திருடும் புதிய மோசடி  வாட்ஸ்அப்

    சைபர் கிரைம்

    இந்தியாவை அதிகம் குறிவைத்து தொடுக்கப்பட்ட 'ஹேக்டிவிஸ்ட்' சைபர் தாக்குதல்கள் இந்தியா
    போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் சைபர் பாதுகாப்பு
    இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை சைபர் பாதுகாப்பு
    இன்றோடு ஓய்வுபெறுகிறார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு  கன்னியாகுமாரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023