NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / பெருகும் AI பாட்களின் தேவை.. களத்தில் குதித்த இந்திய டெக் நிறுவனம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெருகும் AI பாட்களின் தேவை.. களத்தில் குதித்த இந்திய டெக் நிறுவனம்!
    பெருகும் AI பாட்களுக்கான தேவை

    பெருகும் AI பாட்களின் தேவை.. களத்தில் குதித்த இந்திய டெக் நிறுவனம்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 14, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் சாட்ஜிபிடி போன்ற, ஆனால் தங்கள் தகவல்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவையைத் தேடி வருகின்றன.

    இது AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ மற்றும் கூகுளைக் கடந்து, பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் புதிய பாதையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

    அந்தப் பாதையில் தற்போது பயணிக்க முடிவு செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிறுவனம்.

    தங்கள் வாடிக்கையாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்காக புதிதாக 1,300 மென்பொருள் பொறியாளர்களை பணியில் அமர்த்தத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

    அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகவும் அதிக பணியாளர்களை பணியில் அமர்த்துவது இதுவே முதல்முறை, எனத் தெரிவித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜோசப் அனந்தராஜூ.

    செயற்கை நுண்ணறிவு

    ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸின் சேவை: 

    கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும், அவர்களது சேவையை டிஜிட்டல்மயமாக்க உதவி செய்யும் நிறுவனம் தான் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ்.

    அந்நிறுவனமானது AI மூலம் பெறக்கூடிய வருவாய் மிகவும் குறைவு என்றாலும், வேகமாக வளர்ந்து வரும் துறை என்பதால், அதில் தற்போது முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறது ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ்.

    சாட்ஜிபிடியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்வதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனும் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

    சாட்ஜிபிடியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கருவிகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கி அளிப்பது தான் ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸின் வேலை.

    இதன் மூலம், சாட்ஜிபிடியிடம் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும். அதே நேரம், அந்த AI சேவையையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    செயற்கை நுண்ணறிவு

    'பாதுகாப்பு காரணங்களுக்காவே தங்களுடைய AI திட்டத்தை தள்ளிவைத்தது கூகுள்'.. முன்னாள் ஊழியர் பேட்டி! கூகுள்
    AI உதவியுடன் ஆன்லைன் மோசடி.. இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு! ஆன்லைன் மோசடி
    IBM ஊழியர்களுக்கு CEO கொடுத்த அதிர்ச்சி தகவல் - 7800 பேரின் வேலையை பறிக்கும் AI!  ஆட்குறைப்பு
    AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு!  உலகம்

    சாட்ஜிபிடி

    ChatGPT பிளஸ் சந்தாவை பரிசாக வழங்கும் நிறுவனம்! காரணம் என்ன? பெங்களூர்
    டிக்கெட் விலையை நிர்ணயிக்க ChatGPT-யை பயன்படுத்தும் ஏர் இந்தியா! ஏர் இந்தியா
    AI சாட்போட்டுடன் உரையாடிய பெல்ஜியம் நபர் தற்கொலை வைரல் செய்தி
    ChatGPT-யை தடை செய்த இத்தாலி அரசு - காரணம் என்ன? செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025