NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / போட்டித் தேர்வில் ஏமாற்ற சாட்ஜிபிடிப் பயன்படுத்திய தெலுங்கானா கும்பல்!
    போட்டித் தேர்வில் ஏமாற்ற சாட்ஜிபிடிப் பயன்படுத்திய தெலுங்கானா கும்பல்!
    1/2
    தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

    போட்டித் தேர்வில் ஏமாற்ற சாட்ஜிபிடிப் பயன்படுத்திய தெலுங்கானா கும்பல்!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 30, 2023
    12:30 pm
    போட்டித் தேர்வில் ஏமாற்ற சாட்ஜிபிடிப் பயன்படுத்திய தெலுங்கானா கும்பல்!
    போட்டித் தேர்வுகளில் ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி

    சாட்ஜிபிடி-யை பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், தெலுங்கானாவில் போட்டித் தேர்வுகளில் ஏமாற்ற அதனைப் பயன்படுத்தியிருக்கின்றனர். தெலுங்கானாவில் Assistant Executive Engineer மற்றும் Divisional Accounts Officer ஆகிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற ஏழு மாணவர்கள் ப்ளூடூத் சாதனம் மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி ஏமாற்றியது கண்டறியப்பட்டிருக்கிறது. மேற்கூறிய தேர்வுகள் தொடங்கிய பத்து நிமிடங்களில் தேர்வறையில் இருந்த வினாத்தாளை அங்கிருந்த அதிகாரி ஒருவர் புகைப்படம் எடுத்து ரமேஷ் என்வருக்கு அனுப்பியிருக்கிறார். போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு அது குறித்து அறியாதவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடை கண்டறிவது எளிதல்ல.

    2/2

    ஏமாற்று வேலைக்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்: 

    எனவே, அந்த வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு சாட்ஜிபிடியின் உதவியுடன் விடையைக் கண்டறிந்திருக்கின்றனர். பின்னர் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு தேர்வெழுதிய ஏழு நபர்களுக்கும் ப்ளூடூத் சாதனம் மூலம் விடைகளை பகிர்ந்திருக்கின்றனர். மற்றவர்கள் கண்டறிய முடியாத வகையில் சிறிய ப்ளூடூத் கருவியை தேர்வறையில் இருந்தவர்கள் தங்கள் காதுகளில் பொருத்தியிருக்கிந்திருக்கின்றனர். இந்த ஏமாற்று செயலை தற்போது இது குறித்து விசாரித்து வந்த சிறப்பு விசாரணைக் குழு கண்டறிந்திருக்கிறது. இப்படி விடைகளைப் பகிர்வதற்காக அந்த ரமேஷ் என்பவருக்கு ஏமாற்று செயலில் ஈடுபட்ட ஏழு பேரும் தலா ரூ.40 லட்சம் கொடுப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதுதவிர, வெளியே கசிந்த வினாத்தாளை 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.25 முதல் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவமும் இந்த விசாரணையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சாட்ஜிபிடி
    தெலுங்கானா

    சாட்ஜிபிடி

    AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவிலும் வெளியிடப்பட்டது ChatGPT-யின் IOS செயலி! செயற்கை நுண்ணறிவு
    IOS இயங்குதளத்திற்கான ChatGPT செயலி.. 12 நாடுகளில் விரிவாக்கம் செய்தது OpenAI செயற்கை நுண்ணறிவு
    ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம்.. ஓபன்ஏஐ சிஇஓ கருத்து! செயற்கை நுண்ணறிவு

    தெலுங்கானா

    "ரஜினிகாந்ததை விமர்சித்தது பெரும் தவறு..மன்னிப்பு கேட்க வேண்டும்": சந்திரபாபு நாயுடு ட்வீட் ரஜினிகாந்த்
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் நரேந்திர மோடி
    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான கிரண் ரெட்டி பாஜகவில் இணைந்தார் இந்தியா
    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023