NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவ சக்தி' என்று பெயர்: சர்வதேச வானியல் ஒன்றியம் ஒப்புதல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவ சக்தி' என்று பெயர்: சர்வதேச வானியல் ஒன்றியம் ஒப்புதல் 

    சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவ சக்தி' என்று பெயர்: சர்வதேச வானியல் ஒன்றியம் ஒப்புதல் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 24, 2024
    04:20 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச வானியல் ஒன்றியம்(IAU) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு அதிகாரப்பூர்வமாக "சிவ சக்தி" என்று பெயரிடப்பட்டது.

    சந்திரயான்-3 தரையிறங்கிய தளம் "சிவ சக்தி" என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது.

    சந்திரயான்-3 தரையிறங்கிய தளத்தின் "ஸ்டேடியோ சிவசக்தி" என்ற பெயர் பாரிஸை தளமாகக் கொண்ட IAU ஆல் மார்ச் 19 அன்று அங்கீகரிக்கப்பட்டது.

    இது குறித்த தகவல், IAU ஆல் அங்கீகரிக்கப்பட்ட கிரகங்களின் பெயர்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கும் கோள்களின் பெயரிடல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்தியா 

    இயற்கையின் இருமையை குறிக்கும் சொல் 'சிவசக்தி' 

    "சிவசக்தி" என்ற பெயரின் தோற்றம் குறித்து பேசியிருக்கும் அந்த அரசிதழில், "இந்திய புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட கலவையான வார்த்தை இதுவாகும். சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தளத்தின் பெயர் ஆண்பால் ('சிவன்') மற்றும் பெண்பால் ('சக்தி') என்ற இயற்கையின் இருமையை குறிக்கிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலவின் தென் துருவத்திற்கு அருகே சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி புள்ளி என்று பெயரிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு அறிவித்திருந்தார்.

    ஆகஸ்ட் 26, 2023 அன்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் மிஷன் கண்ட்ரோல் வளாகத்தில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    சந்திரயான் 3

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இஸ்ரோ

    அக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் சென்னை
    தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் மு.க ஸ்டாலின்
    சந்திரயான் 3: தரையிறங்கிய பிறகு செயல்பாட்டை நிறுத்திய அறிவியல் உபகரணம்.. என்ன காரணம்? சந்திரயான் 3
    இன்று ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தவிருக்கும் இஸ்ரோ ககன்யான்

    சந்திரயான் 3

    சந்திரயான் 3: நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டது பிரஞ்யான் ரோவர் பிரஞ்யான் ரோவர்
    'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள்  சந்திரன்
    சந்திரயான் 3 வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய எம்எஸ் தோனி மகள்; வைரலாகும் காணொளி சந்திரயான்
    சந்திரயான் 3: வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் உணர்ச்சிவசப்படும் காணொளி இணையத்தில் வைரல் இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025