NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / அனைத்து மொபைல்களிலும் FM ரேடியோ வசதி.. மத்திய அரசு புதிய உத்தரவு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    அனைத்து மொபைல்களிலும் FM ரேடியோ வசதி.. மத்திய அரசு புதிய உத்தரவு!
    அனைத்து மொபைல் போன்களிலும் FM ரேடியோ வசதி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது

    அனைத்து மொபைல்களிலும் FM ரேடியோ வசதி.. மத்திய அரசு புதிய உத்தரவு!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 10, 2023
    09:43 am

    செய்தி முன்னோட்டம்

    சில ஆண்டுகளுக்கு முன்புவரை, குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்னும், அவை வந்த சில ஆண்டுகள் வரையிலும், எல்லா ஃபோன்களிலும் FM ரேடியோ இருந்தது.

    ஆனால், கடந்த சில ஆண்டுகளாக புதிதாக வெளியாகும் மொபைல்களில் ரேடியோ வசதி அளிக்கப்படுவதில்லை.

    இதனைத் தொடர்ந்து மொபைல் தயாரிப்பு நிறுனங்களுக்கு மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

    இந்திய செல்லுலார் மற்றும் மின்சாதன கூட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான தயாரிப்புக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளிடம் மொபைல்போன்களில் ரேடியோ வசதியை கட்டாயமாக அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

    அடுத்து வெளியாகும் போன்களில் ரேடியோ ரீசிவரை பயன்படுத்தியிருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் ரேடியோவை ஒரு வசதியாகவாவது மொபைலில் வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது.

    ஸ்மார்ட்போன்

    ஏன் ரேடியோ வசதி தேவை? 

    யூடியூப், ஓடிடி என பொழுதுபோக்கு ஆப்ஷன்கள் அதிகரித்திருக்கும் இன்றைய காலத்தில் ரேடியோவின் தேவை பயனர்களுக்கு தேவையில்லை என்ற எண்ணத்தில் மொபைல் நிறுவனங்கள் அந்த வசதியை நிறுத்தியிருக்கலாம்.

    ஆனால், பொழுதுபோக்கைக் கடந்து நாட்டில் தொலைத்தொடர்பு வசதிகள் கூட இல்லாத இடங்களிலும், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க முடியாத இடங்களிலும் கூட ரேடியோவின் மூலம் அரசால் மக்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது.

    இயற்கைப் பேரிடர் காலங்கள் மற்றும் அவசர காலங்களிலும் கூட, தேவையான தகவல்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க ரேடியோவே பயன்படுத்தப்படுகிறது.

    கொரோனா காலத்தில் கூட அது சார்ந்த தகவல்களை ரேடியோ மூலமே அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது அரசு.

    எனவே தான் FM ரேடியோ வசதியை அனைத்து மொபைல்களிலும் வழங்க மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    ஸ்மார்ட்போன்

    ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!  கூகுள்
    ஏப்ரல் 14-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    ஏப்ரல் 15-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    எப்படி இருக்கிறது iQoo Z7 5G: ரிவ்யூ! தொழில்நுட்பம்

    மத்திய அரசு

    கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்? தொழில்நுட்பம்
    மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி உச்ச நீதிமன்றம்
    சமையல் எரிவாயுவின் விலை குறையும்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியா
    நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025