NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?
    ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?
    1/2
    தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

    ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 24, 2023
    11:07 am
    ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?
    ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பங்கள்

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து அதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல ஆன்லைன் மோசடி செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேறொரு நபரைப் போல சித்தரித்து வடக்கு சீனைவைச் சேர்ந்த ஒருவரிடம் 5 கோடி ரூபாய் பணம் பறித்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வடக்கு சீனாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரிடம், அவருடைய நண்பரைப் போலப் பேசி, வீடியோ காலில் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரது நண்பரைப் போலவே உருவத்தை சித்தரித்து தங்களுடைய வங்கிக் கணக்கிற்கு இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாயை கடன் பெறுவதைப் போல பெற்று ஏமாற்றியிருக்கின்றனர். வீடியோ காலில் பேசியது வேறு நபர் என்பதைக் கண்டறிய முடியாத அளவிற்கு மிகவும் துல்லியமாக இருந்திருக்கிறது அந்த AI தொழில்நுட்பம்.

    2/2

    இந்தியாவிலும் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்: 

    இந்தியாவிலும் ஆடியோ காலில் AI தொழில்நுட்பங்கள் கொண்டு தெரிந்தவர்கள் போலப் பேசி ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருவர் பேசும் 2 நொடி ஆடியோ இருந்தால் போதும், அதனைப் போலவே குரலை உருவாக்கும் அளவிற்கு AI தொழில்நுட்பங்களின் திறன் வளர்ந்திருக்கிறது. மேற்கூறிய மோசடி சம்பவங்களின் வெற்றி சதவிகிதத்தை அதிகரிப்பது AI தொழில்நுட்பங்களே. இந்த நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதனால், அது குறித்த தெளிந்த பார்வை இருப்பவர்களால் கூட, இது உண்மையா பொய்யா எனக் கண்டறியா முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தெரிந்த நபர்களாக இருந்தாலும், ஒன்றுக்கு பல வழிகளில் உறுதி செய்த பிறகு ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புவது சிறந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆன்லைன் மோசடி
    செயற்கை நுண்ணறிவு

    ஆன்லைன் மோசடி

    பெருகும் போலி சாட்ஜிபிடி செயலிகள்.. பயனர்களே உஷார்! சாட்ஜிபிடி
    ஆன்லைன் மோசடி.. ரூ.42 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்! தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப் மூலம் புதிய ஆன்லைன் மோசடி.. பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்
    AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்! சைபர் கிரைம்

    செயற்கை நுண்ணறிவு

    AI தொழில்நுட்பங்களுக்குக் கட்டுப்பாடு.. என்ன சொல்கிறார் OpenAI நிறுவனத்தின் CEO! சாட்ஜிபிடி
    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களுக்கு கடிவாளம் தேவை! சாட்ஜிபிடி
    சென்னை ஐஐடியில் திறக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த AI ஆராய்ச்சி மையம்! சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023