NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

    பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் அபாயம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2024
    06:53 pm

    செய்தி முன்னோட்டம்

    பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றுகள் மனிதர்கள் உட்பட மற்ற உயிரினங்களில் அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு(WHO) இன்று மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது.

    "இது ஒரு மிகப்பெரிய கவலை என்று நான் நினைக்கிறேன்" என்று WHOஇன் தலைமை விஞ்ஞானி ஜெர்மி ஃபாரார் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

    2020 இல் தொடங்கிய தற்போதைய பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலூட்டிகளின் பட்டியலில் பசுக்களும் ஆடுகளும் இணைந்துள்ள நிலையில், ஐ.நா சுகாதார நிறுவன அதிகாரி இதை "உலகளாவிய ஜூனோடிக் விலங்கு தொற்றுநோய்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இன்ஃப்ளூயன்ஸா A(H5N1) வைரஸ் மனிதர்களிடையே பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், விலங்குகளுடன் தொடர்பு கொண்ட மனிதர்களுக்கு பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு அதிக சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 

    889 பறவை காய்ச்சல் மனித வழக்குகள் பதிவாகியதாக ஐநா தகவல் 

    "நிச்சயமாக பெரிய கவலை என்னவென்றால், வாத்துகள் மற்றும் கோழிகளுக்கு பரவி பின்னர் அதிகமாக இது பாலூட்டிகளை பாதிக்கக்க்கூடும். அந்த வைரஸ் இனி பரிணாம வளர்ச்சியடைந்து, மனிதர்களைப் பாதிக்கும் திறனை வளர்த்து கொண்டு, பின்னர் மனிதனிடமிருந்து மனிதனுக்குச் செல்லும் திறனை மேம்படுத்தக்கூடும்" என்று ஃபரார் கூறியுள்ளார்.

    கடந்த 15 மாதங்களில், 889 பறவை காய்ச்சல் மனித வழக்குகள் பதிவாகியதாக ஐநா பதிவு செய்துள்ளது.

    அதில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இதன் இறப்பு விகிதம் 52 சதவீதமாக உள்ளது.

    அப்படியானால் இந்த நோயினால் பாதிக்கப்படும் 52 சதவீதம் பேர் உயிரிழக்கக்கூடும்.

    சமீபத்திய ஆண்டுகளில் மில்லியன் கணக்கான காட்டுப் பறவைகளைக் கொன்ற பறவைக் காய்ச்சலின் திரிபு கடந்த சில ஆண்டுகளாக பாலூட்டிகளின் வரம்பில் கண்டறியப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பறவை காய்ச்சல்
    உலக சுகாதார நிறுவனம்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    பறவை காய்ச்சல்

    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு பிரேசில்
    உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள் உலகம்
    அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறப்பு; பறவைக் காய்ச்சலா என சந்தேகம் அண்டார்டிகா

    உலக சுகாதார நிறுவனம்

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO உலக செய்திகள்
    உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள் மருத்துவ ஆராய்ச்சி
    தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025