வெப்ப அலையினால் அதிகரிக்கும் 'விழித்திரை பக்கவாதம்': அப்படியென்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
தற்போது நாடு முழுவதும் அதிகரித்துள்ள கடுமையான வெப்ப அலைகள் காரணமாக பலருக்கும் இந்த ஆரோக்கிய சீர்கேடு நிலை ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கண்ணுக்கு இரத்தத்தை வழங்கும் விழித்திரை தமனி தடைபடும்போது ஏற்படும் ஒரு மருத்துவநிலை தான் விழித்திரை பக்கவாதம் எனப்படுகிறது. வெயிலினால் ஏற்படும் அதீத நீரிழப்பு மற்றும் இரத்த பாகுத்தன்மை அதிகரிப்பு காரணமாக இந்த ஆபத்தான நிலை ஏற்படுகின்றன. இதனால் ரத்தநாளங்களில் அடைப்புகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கிறது. வெப்பமான மாதங்களில், மனித உடல் அதன் வெப்பநிலையை சீராக்க குறிப்பிடத்தக்க அழுத்தத்திற்கு உள்ளாகிறது. இதனால் நீரிழப்பு, இரத்தம் தடித்தல் மற்றும் அதிகரித்த இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படும். மேற்கூறிய அனைத்து காரணிகளும் அதிகமாகும் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.
விழித்திரை பக்கவாதம் என்றால் என்ன?
இரத்த நாளங்கள் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன. அவை சுருங்கும்போதும், இரத்தக் கட்டிகளால் தடைபடும்போது, இரத்த விநியோகம் தடைப்பட்டு, பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். ஹெல்த்லைன் படி, மருத்துவ ரீதியாக விழித்திரை தமனி அடைப்பு(retinal artery occlusion) எனப்படும் கண் பக்கவாதம் ஏற்பட்டால், இந்த அடைப்பு விழித்திரைக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் ஒன்றை பாதிக்கும். விழித்திரை என்பது உங்கள் கண்ணின் பின்புறத்திள் உள்ள மெல்லிய படமாகும். இது உங்கள் மூளைக்கு ஒளி சமிக்ஞைகளை அனுப்பும். அதன் மூலமாகவே உங்கள் கண்கள் என்ன பார்க்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். விழித்திரையின் இரத்த விநியோகம் தடைபடும் போது, அது பார்வை இழப்பு போன்ற நிரந்தர சேதத்திற்கு வழிவகுக்கும்.
விழித்திரை பக்கவாதத்தின் அறிகுறிகள் என்ன?
ஹெல்த்லைன் படி, கண் பக்கவாத அறிகுறிகள் ஒரு சில மணிநேரங்களிலேயே உண்டாகலாம் அல்லது பல நாட்களாக மெதுவாக உருவாகலாம். ஒரு கண்ணில் மட்டும் அறிகுறிகள் இருந்தால், அது விழித்திரை பக்கவாதமாக இருக்கலாம். நீங்கள் கவனிக்க வேண்டிய மற்ற அறிகுறிகள்: மிதக்கும் புள்ளிகள்: ஒருவரின் பார்வையில் மிதக்கும் சிறிய சாம்பல் புள்ளிகளாக தோன்றும். மங்கலான பார்வை: ஒருவரின் பார்வை படிப்படியாக ஒரு பக்கமாகவோ அல்லது மொத்தமாகவே பார்வை மோசமடையலாம். பார்வை இழப்பு: பார்வை இழப்பை படிப்படியாகவோ அல்லது திடீரென தோன்றக்கூடும். வலி அல்லது அழுத்தம்: விழித்திரை பக்கவாதம் பொதுவாக வலியற்றதாக இருந்தாலும், கண்களில் அழுத்தம் அல்லது லேசான வலி போன்ற உணர்வுகள் ஏற்படக்கூடும். இரத்தப்போக்கு: விழித்திரை சிவப்பாகத் தோன்றலாம்.
விழித்திரை பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?
விழித்திரை பக்கவாதம் ஏற்படாமல் இருக்க உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க, இந்த தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும். நீரேற்றத்துடன் இருங்கள் சன்கிளாஸ்களை அணியுங்கள் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவதைத் தவிர்க்கவும் AC பயன்பாட்டை குறைத்து கொள்ளவும் நல்ல கண் சுகாதாரத்தை கடைபிடிக்கவும்