'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள்
சந்திரயான் 3 மூலமாக, நேற்று, இந்தியா நிலவின் தென் துருவத்தை தொட்டு, சாதனை புரிந்தது. இதன் மூலம், சந்திரனின் தென்பகுதியை தொட்ட முதல் நாடாகவும், நிலவு ஆராய்ச்சியில் வெற்றிகண்ட நான்காம் நாடாகவும் உள்ளது இந்தியா. இந்த வெற்றிகரமான விண்கல பயணத்திற்கு பின்னால் இருப்பது ஒரு பல நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பும், விடாமுயற்சியும் தான். கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 தோல்வியடைந்தது. அப்போது இஸ்ரோவின் தலைவராக இருந்த சிவன், பிரதமர் மோடியிடம் உடைந்து அழுத தருணம், பலரையும் நெகிழவைத்தது. தற்போது அந்த தோல்விகளில் துவண்டுவிடாமல், அதிலிருந்து மீண்டு, சரித்திரத்தை படைத்துள்ள இஸ்ரோ குழுவினரை பற்றி இணையத்தில் பலவித மீம்கள் வைரலாகி வருகின்றன.