NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பாரம்பரிய உணவு என்று அழைக்கப்படும் இட்லியின் பூர்வீகம் இந்தியா அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
    பாரம்பரிய உணவு என்று அழைக்கப்படும் இட்லியின் பூர்வீகம் இந்தியா அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
    வாழ்க்கை

    பாரம்பரிய உணவு என்று அழைக்கப்படும் இட்லியின் பூர்வீகம் இந்தியா அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    February 22, 2023 | 11:56 am 1 நிமிட வாசிப்பு
    பாரம்பரிய உணவு என்று அழைக்கப்படும் இட்லியின் பூர்வீகம் இந்தியா அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
    இட்லியின் பூர்வீகம் இந்தியா அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?

    தினமும் காலை, சூடான இட்லியுடன், சாம்பாரும், சட்னியும் என ருசித்து சாப்பிடும் நபரா நீங்கள்? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல். இட்லி நமது தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு என்று இத்தனை நாள் நீங்கள் நம்பிக்கொண்டிருந்தது பொய். இட்லியின் பூர்வீகம் இந்தியாவே இல்லை எனக்கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பிரபல உணவு வரலாற்றாசிரியர் கே.டி. ஆச்சார்யாவின் கூற்றுப்படி, இட்லி, 7-12 நூற்றாண்டுக்குள் தான் இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கும் எனக்கூறுகிறார். மேலும் இந்த உணவு, இந்தோனேசியாவிலிருந்து வந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதென்றும் அவர் கூறுகிறார். இந்தோனேசியாவில் அது 'கெட்லி' அல்லது 'கேதாரி' என்று அழைக்கப்பட்டது. 7- 12ஆம் நூற்றாண்டு வரை, பல இந்து மன்னர்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்தனர்.

    இந்தோனேசியா மன்னர்கள் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்த இட்லி

    அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, ​​அவர்களுடன் வந்த அரச சமையல்காரர்கள் மூலம் இந்தியாவிற்குள் இட்லி அறிமுகம் ஆகி இருக்கும். இப்படித்தான் இந்தோனேசிய 'கெட்லி', இந்தியாவுக்கு வந்து 'இட்லி'யாக மாற்றப்பட்டது என அவர் மேலும் கூறுகிறார். மற்றொரு ஆய்வில், இந்தியாவில் குடியேறிய அரபியர்கள் மூலம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காரணம், அரேபியர்கள் ஹலால் உணவுகள் மற்றும் அரிசி உருண்டைகளை மட்டுமே உட்கொள்வதாக கூறப்படுகிறது. .இந்த அரிசி உருண்டைகள் சற்று தட்டையான வடிவத்தில் இருந்தன என்றும்,அதனுடன் தேங்காய் குழம்பு (சட்னி) சேர்த்து உண்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கி.பி 10ஆம் நூற்றாண்டில் கஜினி முகமது படையெடுப்புக்கு பின்னர், சௌராஷ்ட்ரிய வணிகர்கள், தென்னிந்தியாவிற்கு இடம் பெயர்ந்து, இட்லியின் செய்முறையைக் கொண்டு வந்து, அதற்குப் பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உணவு குறிப்புகள்
    வைரல் செய்தி
    ஆரோக்கியம்

    உணவு குறிப்புகள்

    இனிப்பு பிரியர்களே, சர்க்கரையில் இத்தனை வகை உண்டென்று தெரியுமா? உடல் நலம்
    உடல் ஆரோக்கியம்: மறதியை தூண்டக்கூடிய சில உணவுகள் ஆரோக்கியம்
    பஃபே உணவை முழுவதுமாக குற்ற உணர்வு இல்லாமல் அனுபவிக்க சில குறிப்புகள் ஆரோக்கிய குறிப்புகள்
    காரமான உணவுகள் நம் உடலுக்கு நல்லதா? இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? ஆரோக்கியம்

    வைரல் செய்தி

    சிறுநீரக கல் காரணமாக, நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி கோலிவுட்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    மும்பையில் நடிகர் சித்தார்த்துடன் உணவருந்திய அதிதி ராவ்; இணையத்தில் வைரலாகும் வீடியோ ட்ரெண்டிங் வீடியோ
    சிறந்த திரைப்படத்திற்கான தாதாசாகேப் பால்கே விருதை வென்ற 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் பாலிவுட்

    ஆரோக்கியம்

    Panic attack-ஆல் அவதிப்படுகிறீர்களா? அதை சமாளிக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ் மன ஆரோக்கியம்
    கலோரி பற்றாக்குறை: எடை இழக்கும் போது நீங்கள் கண்காணிக்க வேண்டிய முக்கிய மெட்ரிக் உடல் ஆரோக்கியம்
    ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே: வாடகை சைக்கிளில் குரங்கு பெடல் அடித்தது ஞாபகம் இருக்கிறதா? உடல் நலம்
    இந்த பரீட்சை நேரத்தில், உங்கள் மன அழுத்தத்தை போக்க உதவும் சில உணவுகள் மன அழுத்தம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023