Loading...
யாருக்கு முதல் முன்னுரிமை? உறுப்பு தானத்திற்குப் பின் நடப்பது என்ன? இந்தியாவில் உறுப்பு ஒதுக்கீடு செயல்படும் முறை
இந்தியாவில் உறுப்பு தானம் மேற்கொள்வதற்கான நடைமுறைகள்

யாருக்கு முதல் முன்னுரிமை? உறுப்பு தானத்திற்குப் பின் நடப்பது என்ன? இந்தியாவில் உறுப்பு ஒதுக்கீடு செயல்படும் முறை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 13, 2026
06:07 pm

செய்தி முன்னோட்டம்

உலக உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள் நோயாளிகளுக்கு எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வு அவசியமாகிறது. ஒருவர் தனது உறுப்புகளைத் தானம் செய்ய முன்கூட்டியே முடிவெடுத்தாலோ அல்லது அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தாலோ, அந்த உறுப்புகள் யாருக்கு செல்ல வேண்டும் என்பதை மருத்துவர்கள் தன்னிச்சையாக முடிவு செய்வதில்லை. தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் வெளிப்படையான வழிகாட்டுதல்களின்படியே உறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

பொருத்தம்

சிறுநீரக ஒதுக்கீடும் திசுப் பொருத்தமும்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை பொறுத்தவரை, மூளைச்சாவு அடைந்த கொடையாளியிடமிருந்து பெறப்படும் சிறுநீரகம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.

இதற்கு இரத்த வகை பொருத்தம் மற்றும் திசுப் பொருத்தம் ஆகிய இரண்டும் மிகவும் கட்டாயமாகும்.

காத்திருப்போர் பட்டியலில் முதலில் உள்ள நோயாளிக்கு திசுப் பொருத்தம் சரியாக அமைந்தால் மட்டுமே அவருக்கு உறுப்பு மாற்றப்படும்.

இரத்த வகை அல்லது திசுப் பொருத்தம் பொருந்தாத பட்சத்தில், அடுத்த இடத்தில் உள்ள நோயாளிக்கு அந்த உறுப்பு மாற்றப்படும்.

அவசரப் பட்டியல்

இதயம், கல்லீரல் மற்றும் தீவிர அவசரப் பட்டியல்

இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பொறுத்தவரை, சிறுநீரகத்தைப் போல திசுப் பொருத்தம் முதன்மையாகப் பார்க்கப்படுவதில்லை.

மாறாக, இரத்த வகை பொருத்தம், கொடையாளி மற்றும் பெறுபவரின் உறுப்பு அளவு ஆகியவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

மேலும், உயிராபத்தில் உள்ள நோயாளிகளுக்காக 'சூப்பர் அர்ஜென்ட்' (Super-urgent) என்ற சிறப்பு முன்னுரிமைப் பட்டியல் பராமரிக்கப்படுகிறது.

இப்பட்டியலில் உள்ள தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு காத்திருப்போர் வரிசையைக் கடந்து உடனடி முன்னுரிமை அடிப்படையில் உறுப்புகள் ஒதுக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

தேவை

தேவையைக் காட்டிலும் குறைவாக உள்ள கொடையாளர்கள்

இந்தியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டில் 20,138 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்து சாதனை படைக்கப்பட்ட போதிலும், உறுப்புகளுக்கான தேவை இன்னும் அதிகமாகவே உள்ளது.

தற்போது நாட்டில் 63,000க்கும் மேற்பட்டோர் சிறுநீரகத்திற்காகவும், 22,000க்கும் மேற்பட்டோர் கல்லீரலுக்காகவும் காத்திருக்கின்றனர்.

உறுப்பு தானம் குறித்த மூடநம்பிக்கைகள், இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய தவறான பயங்கள் மற்றும் விழிப்புணர்வின்மை காரணமாகவே கொடையாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அனைத்து முக்கிய மதங்களும் உறுப்பு தானத்தை மனிதநேய செயலாகவே போற்றுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு உறுப்பு தானம் செய்யப் பலரும் முன்வர வேண்டும்.

ADVERTISEMENT