NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்!
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும் என லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 30, 2023
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகெங்கிலும் உள்ள சமூகங்கள், கொசுக்கள் மூலமாக பரவும் மலேரியாவின் தாக்கத்திற்கு ஆளாகி வருகின்றன. உயிர்கொல்லியாக பார்க்கப்படும் இந்த நோயை கட்டுப்படுத்த பல நாடுகளும் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.

    இப்போது லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் மலேரியாவை ஒழிக்க, கொசுக்களின் மரபணு மாற்றலாம் என்றும், அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

    மலேரியா என்பது, பிளாஸ்மோடியம் எனப்படும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். இது அனாபிலிஸ் கொசுக்களால் மக்களுக்கு தொற்றுகிறது. இந்த கொசுக்களின் மரபணுக்களை மாற்றியமைதால், மலேரியா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

    அதன்படி, பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் திறனைத் தடுத்து, இந்த ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியை தடுப்பது அல்லது அதன் வளர்ச்சி நேரத்தை கட்டுப்படுத்தலாம் என முடிவெடுத்தனர்.

    card 2

    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள்

    ஒட்டுண்ணிகள், கொசுவின் குடலுக்குள் வளர்ந்து, அதன் உமிழ்நீர் சுரப்பிகளுக்குச் சென்று, கொசு கடிக்கும் அடுத்த நபரை மூலம் பரவும். இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகள், கொசுவின் குடலில், ஒட்டுண்ணியின் வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம், மலேரியா பரவல் கட்டுப்படுத்தப்படும் என நம்பினர்.

    இந்த மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட கொசுக்கள், மனித இரத்தத்தை உண்ணும் போது, ​​அவை அவற்றின் குடலில், ஆண்டிமைக்ரோபியல் பெப்டைடுகள் எனப்படும் இரண்டு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.

    இந்த மூலக்கூறுகள் மலேரியா ஒட்டுண்ணியின் வளர்ச்சியைக் குறைக்கின்றன. இதன் விளைவாக, ஒட்டுண்ணியின் அடுத்த கட்ட வளர்ச்சியான, கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளை அடைய தாமதமாகிறது. இந்த காலகட்டத்திற்குள், கொசுக்களின் ஆயுட்காலமும் இயற்கையாகவே முடிந்துவிடும்.

    இப்படியாக மலேரியா பரவல் தடுக்கப்படும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மலேரியா
    மருத்துவ ஆராய்ச்சி
    மருத்துவம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மலேரியா

    இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உலக சுகாதார நிறுவனம்

    மருத்துவ ஆராய்ச்சி

    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் சமூக வலைத்தளம்
    சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உடல் நலம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர் இந்தியா

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025