NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதம் இருப்பதனால் கிடைக்கும் பலன்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதம் இருப்பதனால் கிடைக்கும் பலன்கள்
    சிவனை வழிபடுவது சிவராத்திரி என்றால், அம்பிகையை வழிபடுவது நவராத்திரி எனப்படுகிறது.

    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதம் இருப்பதனால் கிடைக்கும் பலன்கள்

    எழுதியவர் Srinath r
    Oct 21, 2023
    05:11 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா மகாளய அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் தொடங்கி 9 நாட்களுக்கு, இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களால் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவில், பெண்கள் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டல் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

    ஆனால் நவராத்திரி காலத்தில் விரதம் இருப்பது உங்களுக்கு மனதளவில் மட்டுமல்லாமல், உடல் அளவிலும் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

    நவராத்திரி காலத்தில் விரதம் இருப்பது உங்கள் செரிமான அமைப்புக்கு சிறிய இடைவேளை அளிக்கிறது. இதன் மூலம் உங்கள் உடம்பில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி உடல் தூய்மை அடைகிறது.

    விரதம் இருப்பது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இது ஹைபர் டென்ஷனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்துகிறது.

    2nd card

    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நவராத்திரி விரதம்

    விரதம் இருப்பது வயிற்றுக்கு மட்டுமல்லாமல் இதயத்திற்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. விரதம் இதய செயல்பாட்டை ஊக்குவிப்பதாக சொல்லப்படுகிறது.

    நவராத்திரி காலத்தில் நாம் விரதம் இருக்கும் போது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் தவிர்ப்போம். அப்போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் அதிகரிப்பதை குறைக்க உதவுகிறது.

    விரத காலத்தில் சத்தான பழங்கள் மற்றும் நட்ஸ் உள்ளிட்டவற்றை உட்கொள்ளும் போது அது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    சர்க்காடியன் ரிதம் மற்றும் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்தி உங்களை நன்றாக உறங்க வைக்கிறது.

    3rd card

    ஹார்மோன் சமநிலையை உண்டாக்கும் விரதம்

    விரதம் இருப்பது நம் உடம்பில் உள்ள அனைத்து ஹார்மோன்களையும் சமநிலையில் வைத்திருக்க உதவுவதாக கூறப்படுகிறது. ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருப்பது மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் நம்மால் மேம்படுத்த முடியும்.

    நவராத்திரியில் விரதம் இருப்பது நம் உடம்பில் இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்க வழி வகுக்கிறது. இதன் மூலம் நம் ஆயுள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

    விரதம் இருப்பது உடல் எடை மேலாண்மையை சரி செய்ய உதவுகிறது. விரதம் இருப்பதன் மூலம் உங்கள் எடை குறையும் எனவும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நவராத்திரி
    இந்தியா
    மாநிலங்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நவராத்திரி

    நவராத்திரி 2023: துர்கை அம்மனின் ஒன்பது அவதாரங்கள் என்ன? அவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்  பண்டிகை
    நவராத்திரி ஸ்பெஷல்: வீட்டில் கொலு வைக்கும் முறை மற்றும் நன்மைகள் திருவிழா
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி விரதத்தின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்  உணவு பிரியர்கள்
    மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ பிரேசில்

    இந்தியா

    மகாராஷ்டிராவில் கண்டெய்னர் மீது மோதிய மினி பஸ்: 12 பேர் பலி, 23 பேர் காயம் மகாராஷ்டிரா
    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர் பாரத்
    அக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் சென்னை
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025