National Cleanliness Day 2024 : தேசிய தூய்மை தினத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக, ஜனவரி 30 ஆம் தேதியை ஆண்டுதோறும் தேசிய தூய்மை தினமாக கொண்டாடுகிறார்கள். தூய்மையான இந்தியா என்பதே இந்த தினத்தின் கருப்பொருளும் ஆகும். இந்த நாளின் நோக்கம் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது. தனி மனித தூய்மை மற்றும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வதில் ஒவ்வொருவரின் பங்கு என்ன என்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது. இந்த நாளில் அரசு சார்பாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாகவும் பல்வேறு கருத்தரங்கங்கள், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, சுத்தத்த்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்த நாளை கொண்டாடுவது என மத்திய அரசு அறிவுறுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி இருந்தபோது, அவர் தூய்மை இந்தியா(Swachh Bharat: Swasth Bharat)இயக்கத்தை துவக்கி வைத்தார்.