NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
    கால பைரவர் சிலைக்கு, தட்டை கொண்டு, வாய் வழியாக மதுவை ஊற்றுகிறார்கள்

    அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 30, 2023
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    கோவில்களில் வழிபாட்டிற்கு பூ, பழம், ஏதேனும் வேண்டுதல் காணிக்கை வைத்து தான் பார்த்திருப்பீர்கள்.

    சரக்கு பாட்டிலை அர்ச்சனை தட்டில் வைக்கும் கோவில் பற்றி கேள்வி பட்டிருக்கீர்களா?

    அதிர்ச்சி அடைய வேண்டாம்! மற்றுமொரு ஆச்சரிய தகவல். நீங்கள் அர்ச்சனை தட்டில் தரும் சரக்கு பாட்டிலில், கடவுளுக்கு படைத்தது போக மிச்சத்தை, உங்களுக்கே பிரசாதமாகவும் திருப்பி தருகிறார்கள்.

    அதுமட்டுமில்லாமல், கோவில் வாசலில் இருக்கும் கடைகள் அனைத்திலும் சரக்கு பாட்டில் விற்கப்படுகிறது. அதில் உள்ளூர் சரக்கு முதல், வெளிநாட்டு மதுபானம் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப வாங்கி, அர்ச்சனை செய்யலாம்.

    இப்படி ஒரு அதிசய கோவில் எங்குள்ளது என ஆச்சரியமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்.

    card 2

    உஜ்ஜைன் நகரில் உள்ள கால பைரவநாத் கோவில்

    மத்திய பிரதேசத்தின், உஜ்ஜைன் நகரில் உள்ள கால பைரவநாத் கோவில் தான் அந்த வினோத கோவில்.

    பத்ரசேனன் என்ற மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படும் பழமையான கோவில் இது.

    இங்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மதுவை, கால பைரவர் சிலையின் வாய் அருகே, ஒரு தட்டை வைத்து ஊற்றுகிறார்கள் பூசாரிகள்.

    ஊற்றப்படும் மது, அப்படியே சிலையின் வாய் வழியே உள்ளே போய்விடும் விநோதமும் நடக்கிறது.

    இது குறித்து பல ஆராய்ச்சிகள் நடத்திய பின்னரும், அந்த மது எப்படி உள்ளே போகிறது, எங்கு போகிறது என கண்டுபிடிக்கவே முடியவில்லை எனக்கூறுகிறார்கள் அங்கிருப்பவர்கள்.

    இந்த ஆச்சரியங்கள் அடங்கிய கோவிலுக்கு வருகை தருபவர்கள் வேண்டுவது அனைத்தும் நடப்பதாக நம்பப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவில்கள்
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து விமானப்படை
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' பாஜக
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025