NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
    அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
    வாழ்க்கை

    அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

    எழுதியவர் Venkatalakshmi V
    April 30, 2023 | 11:30 am 0 நிமிட வாசிப்பு
    அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
    கால பைரவர் சிலைக்கு, தட்டை கொண்டு, வாய் வழியாக மதுவை ஊற்றுகிறார்கள்

    கோவில்களில் வழிபாட்டிற்கு பூ, பழம், ஏதேனும் வேண்டுதல் காணிக்கை வைத்து தான் பார்த்திருப்பீர்கள். சரக்கு பாட்டிலை அர்ச்சனை தட்டில் வைக்கும் கோவில் பற்றி கேள்வி பட்டிருக்கீர்களா? அதிர்ச்சி அடைய வேண்டாம்! மற்றுமொரு ஆச்சரிய தகவல். நீங்கள் அர்ச்சனை தட்டில் தரும் சரக்கு பாட்டிலில், கடவுளுக்கு படைத்தது போக மிச்சத்தை, உங்களுக்கே பிரசாதமாகவும் திருப்பி தருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், கோவில் வாசலில் இருக்கும் கடைகள் அனைத்திலும் சரக்கு பாட்டில் விற்கப்படுகிறது. அதில் உள்ளூர் சரக்கு முதல், வெளிநாட்டு மதுபானம் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப வாங்கி, அர்ச்சனை செய்யலாம். இப்படி ஒரு அதிசய கோவில் எங்குள்ளது என ஆச்சரியமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்.

    உஜ்ஜைன் நகரில் உள்ள கால பைரவநாத் கோவில்

    மத்திய பிரதேசத்தின், உஜ்ஜைன் நகரில் உள்ள கால பைரவநாத் கோவில் தான் அந்த வினோத கோவில். பத்ரசேனன் என்ற மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படும் பழமையான கோவில் இது. இங்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மதுவை, கால பைரவர் சிலையின் வாய் அருகே, ஒரு தட்டை வைத்து ஊற்றுகிறார்கள் பூசாரிகள். ஊற்றப்படும் மது, அப்படியே சிலையின் வாய் வழியே உள்ளே போய்விடும் விநோதமும் நடக்கிறது. இது குறித்து பல ஆராய்ச்சிகள் நடத்திய பின்னரும், அந்த மது எப்படி உள்ளே போகிறது, எங்கு போகிறது என கண்டுபிடிக்கவே முடியவில்லை எனக்கூறுகிறார்கள் அங்கிருப்பவர்கள். இந்த ஆச்சரியங்கள் அடங்கிய கோவிலுக்கு வருகை தருபவர்கள் வேண்டுவது அனைத்தும் நடப்பதாக நம்பப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோவில்கள்
    மத்திய பிரதேசம்

    கோவில்கள்

    மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் வித்தியாசமான கோவில்கள் உலகம்
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  தமிழ்நாடு
    3,500 ஆண்டு பழமையான மாமரம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் சிறப்புகள்  தமிழ்நாடு
    திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு  திருநெல்வேலி

    மத்திய பிரதேசம்

    ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த வயோதிகர் கைது  இந்தியா
    மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி  இந்தியா
    கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு  இந்தியா
    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023