
யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன?
செய்தி முன்னோட்டம்
2023 -24 ஆண்டிற்கான பட்ஜெட் தொடரில் உரை ஆற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்கு ரூ.89,155 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதோடு, 2047க்குள் சிக்கில் (Sickle) செல் அனீமியாவை அகற்றும் பணியை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அறிவித்தார்.
இந்த சிக்கில் செல் அனீமியாவை (SCD) பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
சிக்கில் செல் அனீமியா ஒரு வித ரத்த சோகை நோயாகும்.
இந்தியாவில், இந்த ரத்த சோகை, பழங்குடி மக்களிடையே பரவலாக காணப்படுகிறது.
அதனால், அரசாங்க சார்பில் பழங்குடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
அதோடு, 0-40 வயதுக்குட்பட்ட, ஏழு கோடி மக்களைப் பரிசோதனைக்கு உள்ளாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரத்த சோகை
சிக்கில் செல் அனீமியாவால் உடலில் ஏற்படுத்தும் கோளாறுகள்
இந்த ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட நபரின் சிவப்பணுக்கள், சில விசித்திர ஹீமோகுளோபின்களை கொண்டிருக்கும்.
அந்த ரத்த அணுக்கள், கடினமாகவும் ஒட்டும் தன்மையுடனும், Sickle வடிவத்திலும் இருக்கும். பொதுவாக, ஆரோக்கியமான சிவப்பணுக்கள் வட்ட வடிவத்திலும், நெகிழ்ச்சி தன்மையுடனும் இருக்கும்.
இந்த வகை கோளாருடைய சிவப்பணுக்கள், சீக்கிரத்தில் இறந்துவிடும். அதனால், உடலில், ரத்த சோகை ஏற்பட்டு, திசுக்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை.
அடுத்து, இந்த வகை SCD செல்கள், சிறிய இரத்த நாளங்கள் வழியாகச் செல்லும்போது, அவை சிக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன.
இதனால் பக்கவாதம், கண் பிரச்சனைகள், மற்றும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.
பிறப்பிலேயே ஏற்படும் இவ்வகை ரத்த சோகையின் அறிகுறிகள், குறைத்தது ஐந்து மாதம் முதலே தென்படும்.