NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சர்வதேச Zero Waste Day : கழிவுகளை பற்றியும், கழிவு மேலாண்மை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
    வாழ்க்கை

    சர்வதேச Zero Waste Day : கழிவுகளை பற்றியும், கழிவு மேலாண்மை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

    சர்வதேச Zero Waste Day : கழிவுகளை பற்றியும், கழிவு மேலாண்மை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 31, 2023, 10:35 am 1 நிமிட வாசிப்பு
    சர்வதேச  Zero Waste Day : கழிவுகளை பற்றியும், கழிவு மேலாண்மை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
    கழுவுகளை குறைத்தும், முறையாக அகற்றியும், உலகத்தை காப்போம்

    Zero Waste Day, உலகம் முழுவதும் அனுசரிக்கபடுகிறது. இந்நாளில், கழிவுகளை பற்றியும், அதை முறையாக அகற்றுவது, மறுசுழற்சி செய்வது பற்றியும், கழிவு மேலாண்மை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கருத்தரங்கங்கள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். அதோடு, மக்களும் பங்கு கொள்ளும் சில வேடிக்கையான மற்றும் சிந்தனையை தூண்டும் நிகழிச்சிகளும் நடைபெறும். இந்த நாளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய சில தகவல்கள் இதோ: குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஏதுமில்லையென்றால், 2050க்குள், உலகளாவிய கழிவு உற்பத்தி, 3.4 பில்லியன் டன்களை எட்டும், என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது சமீபத்திய உலக வங்கி புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது 70% அதிகமாகும். மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான கழிவுகளும் இதில் அடங்கும்.

    அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளும், மின்னணு கழிவுகளும்

    வாழ்க்கையின் தரத்தை பொறுத்து, கழிவுகளின் உற்பத்தி அதிகரிக்கும். உலக வங்கியின் கூற்றுப்படி, சராசரியாக ஒரு நபர், ஒரு நாளைக்கு 0.74 கிலோ கழிவுகளை உற்பத்தி செய்கிறார். புவி, வெப்பமயமாதலுக்கு, மாசு மட்டுமே காரணமில்லை. மனிதனின் முறையற்ற கழிவு மேலாண்மையும் காரணம் என ஐ.நா சபையின் அறிக்கை கூறுகிறது. மக்காத குப்பை வரிசையில், பிளாஸ்டிக்கிற்கும் முக்கிய பங்கு உள்ளது. ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மக்குவதற்கு, 450 ஆண்டுகள் ஆகும். ஒரு ஆய்வறிக்கையின் படி, 1950களில் இருந்து 2017 வரை, 8.3 பில்லியன் டன் பிளாஸ்டிக், மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 9% மட்டுமே மறுசுழற்சிக்கு ஏதுவானது. 2030க்குள், பூமியில் 74 மில்லியன் டன், மின்னணு கழிவுகள் உருவாகும் என அறிக்கைகள் தெரிவிக்கிறது

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்

    உலகம்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத் உலக செய்திகள்
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023