NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா?
    ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா?
    வாழ்க்கை

    ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா?

    எழுதியவர் Venkatalakshmi V
    April 16, 2023 | 10:45 am 1 நிமிட வாசிப்பு
    ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா?
    இந்தியாவின் சுற்றுலாத்துறை ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது

    வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறுவதற்கு ஏற்ப, இந்தியா முழுவதும் சுற்றுலா செல்வதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. காலச்சாரம், வரலாறு, வியக்கவைக்கும் கட்டிடக்கலை, அழகழகான பிரம்மாண்டமான கட்டிடங்கள், கோவில்கள், எழில் கொண்டும் மலைபிரதேசங்கள், கடற்கரைகள் என்று உள்நாட்டவர் மட்டுமல்லாமல் வெளிநாட்டவரையும் கவரும் எக்கச்சக்கமான தலங்கள் உள்ளன. கோவிட் தொற்று பாதிப்பு குறைந்து, ஊரடங்கு முழுவதுமாக விலகிய பிறகு, இந்தியாவில் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியர்கள் மட்டுமல்லாமல், நாட்டின் அழகு, வெளிநாட்டவரையும் பெருமளவில் ஈர்த்துள்ளது. குறிப்பாக, 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில், சுற்றுலாவுக்காக, விடுமுறைக்காக வெளிநாட்டவரின் வருகை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    15 லட்சத்தில் இருந்து 61 லட்சமாக அதிகரித்து வெளிநாட்டு டூரிஸ்ட்டுகள்

    சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, 2019 ஆம் ஆண்டு, அதாவது கொரோனா தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டில், இந்தியாவில் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் (Foreign Tourist Arrivals) வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், "கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு நாட்டில் சுற்றுலாத் தொழில் புத்துயிர் பெற்று வருவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. சமீபத்தில் கிடைத்த தகவல்களின்படி, 2022இல், 60.19 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தள்ளனர். 2021இல் இந்த எண்ணிக்கை 10.52 லட்சமாக இருந்தது" என்றும் அவர் கூறினார். சுற்றுலா அமைச்சகம், 1800-111-363 என்ற இலவச எண்ணில் 24×7 பன்மொழி உதவிமையத்தை அமைத்துள்ளது. ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், ரஷ்யன், சீனம், ஜப்பானியம், கொரியன், அரபு ஆகியவை அடங்கும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சுற்றுலா
    சுற்றுலாத்துறை
    இந்தியா

    சுற்றுலா

    கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள்  கடற்கரை
    கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்   ஆரோக்கியம்
    இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா! இந்தியா
    கோடைகால பிரயாணத்தின் போது நீங்கள் பாதுகாப்பாக செல்ல, சில டிப்ஸ் பயண குறிப்புகள்

    சுற்றுலாத்துறை

    ஆரோவில்லில் தமிழர் பாரம்பரிய திருவிழா துவங்கியது தமிழ்நாடு
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது சென்னை
    தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் அறிமுகம் - சுற்றுலாத்துறை செயலாளர் தமிழ்நாடு
    தமிழகத்தில் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த டெண்டர் வெளியீடு - சுற்றுலா வளர்ச்சித்துறை கழகம் தமிழ்நாடு

    இந்தியா

    2023ஆம் ஆண்டு சாதாரண பருவமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர்  ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா? ஆப்பிள் நிறுவனம்
    8 ஆண்டுகளாக கணவரை 'அண்ணா' என அழைத்த பெண் - வைரல் வீடியோ  ட்ரெண்டிங் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023