பழங்களை உட்கொள்ளும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்
பழங்களில் குறைந்த கலோரிகள், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும், பழங்களை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே உடலுக்கு நன்மை கிடைக்கும். பழங்களை உட்கொள்ளும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகள் இங்கே. இரவில் பழங்கள் சாப்பிடுவது: நள்ளிரவில் நீங்கள் பழங்களைத் சாப்பிடுவது சரியானது அல்ல. பழங்களை சூரிய அஸ்தமனத்திற்கு முன் சாப்பிடுவது நல்லது. ஏனெனில், இரவு நேரத்தில் நமது ஊட்டச் சத்துக்களை உள்வாங்கும் மற்றும் உறிஞ்சும் திறன் வெகுவாகக் குறைகிறது. குடிநீர் பருகுவது: குறிப்பாக தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட்ட பிறகு, தண்ணீர் குடிப்பதால், செரிமான மண்டலத்தின் pH அளவு சமநிலை இல்லாமல் போகும். இது காலரா, வயிற்றுப்போக்கு போன்ற கொடிய நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும்.
நிறைய தண்ணீர் உள்ள பழங்கள் வயிற்று அமிலத்தன்மையைக் குறைத்து pH சமநிலையை மாற்றும்
தவறான பழ சேர்க்கைகள்: இனிப்பு மற்றும் சிட்ரிக் பழங்களை சேர்த்து உண்ணக்கூடாது. ஒவ்வொரு வகை பழங்களும் உங்கள் வயிற்றில் வெவ்வேறு செரிமான சாறுகளை வெளியிடுகிறது. உணவுக்குப் பிறகு பழங்களைச் உடனே சாப்பிடுவது தவறு. உங்கள் உணவு முழுவதுமாக செரிமானம் ஆவதை இது தடுக்கிறது. பழத்தில் இருக்கும் சர்க்கரை, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் செரிமானத்தை மெதுவாக்குகிறது. உணவுக்குப் பிறகு குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் பிறகு பழம் எடுத்துக்கொள்வது நல்லது. பாலுடன் சாப்பிடுவது: பழம் மற்றும் பாலில் தனித்தனியான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, எனவே ஜீரணிக்க வெவ்வேறு நேரம் தேவைப்படுகிறது. பழங்கள், பாலை விட விரைவாக செரிக்கின்றன. எனவே இரண்டும் சேர்ந்து வாயு, வீக்கம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.