
தலைக்கு குளிக்கும் போது நீங்கள் உடனே நிறுத்தவேண்டிய சில தவறுகள்!
செய்தி முன்னோட்டம்
தலைமுடியை அலசுவது என்பதும், வாரத்தில் எத்தனை முறை செய்யவேண்டும் என்பதும் பல நேரங்களில் மிகவும் விவாதத்திற்குரிய தலைப்புகளில் ஒன்றாகும்.
இதில் பல கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள் நிறைந்துள்ளன.
நம்மில் பெரும்பாலோருக்கு எவ்வளவு இடைவெளிக்குள் தலைமுடியைக் கழுவ வேண்டும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இது குழப்பத்திற்கும், சில நேரங்களில் பயனற்ற முடி பராமரிப்பு நடைமுறைகளுக்கும் வழிவகுக்கிறது.
இந்தக் கட்டுரை, தலைமுடியை அலசுவது குறித்த சில பொதுவான கட்டுக்கதைகளை உடைத்து, உங்கள் தலைமுடியைக் கழுவும் முறையைத் தீர்மானிக்க உதவும் உண்மை அடிப்படையிலான நுண்ணறிவுகளை வழங்கும்.
#1
கட்டுக்கதை: தினமும் கழுவுதல் அவசியம்
தலைமுடியை சுத்தம் செய்வதற்கும், ஆரோக்கியத்திற்கும் தினமும் ஷாம்பு போடுவது அவசியம் என்பது ஒரு பொதுவான கட்டுக்கதை.
ஆனால் இது எப்போதும் அப்படி இருக்காது.
உங்கள் தலைமுடி வகை, வாழ்க்கை முறை மற்றும் விருப்பம் ஆகியவை உங்களது தலைகுளித்தல் முறையை தீர்மானிக்கும்.
உதாரணமாக, எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையை அதிகமாகக் கழுவ வேண்டியிருக்கும்.
அதே சமயம் உலர்ந்த அல்லது சுருட்டையான முடியை இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதனால், அடிக்கடி தலைகுளித்தல் அவசியமற்றது.
#2
கட்டுக்கதை: ஷாம்பு போடுவதால் முடி உதிர்தல் ஏற்படுகிறது
ஷாம்பு போடுவதால் முடி உதிர்கிறது என்பது மற்றொரு பொதுவான கட்டுக்கதை.
இயற்கையான முடி உதிர்தல் காரணமாக தலைக்கு குளிக்கும்போது சில முடி இழைகள் உதிர்வது இயல்பானது என்றாலும், ஷாம்பு பொதுவதால் மட்டுமே நிறைய முடி உதிர்வு ஏற்படாது.
குறிப்பிடத்தக்க முடி, மெலிதல்/உதிர்தலுக்கு ஷாம்பு போடுவதை விட மரபியல், மன அழுத்தம் மற்றும் மருத்துவ நிலைமைகள் அதிக காரணமாகின்றன.
#3
கட்டுக்கதை: குளிர்ந்த நீரில் கழுவுவது பளபளப்பை மேம்படுத்தும்
பலர் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பதால் முடி பளபளப்பு கூடும் என சத்தியம் செய்கிறார்கள்.
குளிர்ந்த நீர் சருமத்தின் மேற்புறச் சுவரை தற்காலிகமாக இறுக்கமாக்கி, மென்மையான தோற்றத்தைக் கொடுக்கக்கூடும் என்றாலும், அது கூந்தலின் பளபளப்பு அல்லது ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தாது.
அதற்கு பதிலாக எதையும் சேதப்படுத்தாமல் நன்றாக சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரை தேர்வு செய்யலாம்.
#4
கட்டுக்கதை: அனைத்து ஷாம்புகளும் ஒரே போல தான் வேலை செய்யும்
எல்லா ஷாம்புகளும் ஒரே வேலையைச் செய்கின்றன என்று கருதுவது நியாயம் தான், அவை எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அல்லது அவற்றின் மூல பொருட்கள் என்னவாக இருந்தாலும் சரி.
ஆனால் ஷாம்புகள் உலர்ந்த இழைகளை ஈரப்பதமாக்குவது அல்லது எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையை சுத்தப்படுத்துவது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்படுகின்றன.
உங்கள் கூந்தல் வகைக்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுப்பது, தேவையற்ற சரும கட்டிகள் அல்லது வறட்சியை தவிர்த்து, சிறந்த பலன்களை உறுதி செய்கிறது.
#5
கட்டுக்கதை: இயற்கை எண்ணெய்களை அடிக்கடி நீக்குதல் வேண்டும்
ஆரோக்கியமான தோற்றமுடைய கூந்தலுக்கு இயற்கை எண்ணெய்களை அடிக்கடி கழுவி நீக்கிவிட வேண்டும் என்று சிலர் நம்புகிறார்கள்.
ஆனால், இந்த எண்ணெய்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து உங்கள் முடியை பாதுகாக்கின்றன, அதே நேரத்தில் தலைமுடியை அலசும் போதும் இழைகளை ஈரப்பதமாக வைத்திருக்கின்றன.
உங்களுக்கு இயற்க்கை அமைப்பாக்கவே சுருட்டை முடி இருந்தால் இயற்கையான எண்ணெய்ப்பசை உங்களுக்கு ஒரு வரம்.
இது மிகவும் உதவியாக இருக்கும். எனினும் அதிகப்படியான சுத்திகரிப்பு நடைமுறைகள் மூலம் எண்ணெய்கள் அடிக்கடி அகற்றப்படும்போது முடி உலர்ந்து போகும்.