NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சோலோ-ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய  7 அத்தியாவசிய குறிப்புகள் இதோ! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சோலோ-ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய  7 அத்தியாவசிய குறிப்புகள் இதோ! 
    தனியாக பயணித்து வெளியூர்களில் தங்குவோருக்கு தேவையான 7 அத்தியாவசிய குறிப்புகள் இதோ

    சோலோ-ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய  7 அத்தியாவசிய குறிப்புகள் இதோ! 

    எழுதியவர் Nivetha P
    Jul 20, 2023
    05:15 pm

    செய்தி முன்னோட்டம்

    பயணம் செய்வது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயமோ, அந்தளவிற்கு ஆபத்தும் அதிலுள்ளது.

    குறிப்பாக ஒருவர் தனியாக பயணிக்கையில், அதற்கான முன்னேற்பாடுகள், முக்கியமாக தங்கும் இடத்தினை தீர்மானிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

    நாம் தங்குமிடத்தில் பாதுகாப்பு, அவசரகாலநிலை உள்ளிட்ட விஷயங்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியமாகும்.

    அதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது!

    நீங்கள் தங்குவதற்காக தேர்ந்தெடுக்கும் ஹோட்டலினை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு முன்னர், அதன் இருப்பிடம், பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆராய்ந்துகொள்ளுங்கள்.

    மதிப்புரைகளை(feedback) படிப்பது, புகைப்படங்களை பார்ப்பது, மதிப்பீடுகளை(ratings) சரிபார்ப்பது உள்ளிட்டவை கட்டாயமாகும்.

    எப்போதும் நீங்கள் தங்கும் ஹோட்டலில் தரைத்தளத்தில் அறையினை பதிவுச்செய்யாமல், மேல் தளத்தில் இருக்கும் அறையில் தங்குங்கள். அது திருடர்கள் போன்ற தொல்லைகளில் இருந்து தள்ளியிருக்க உதவும்.

    பாதுகாப்பு 

    ஹோட்டல் அறை எண் விவரங்களை ரகசியமாக வைத்துக்கொள்வது நல்லது 

    தனியே பயணிக்கையில் ஒரேயொரு பை எடுத்துச்செல்வது நல்லது.

    ஏனெனில், தனியே செல்கையில், பொருட்களை பாதுகாப்பதும், அதிக எடைகொண்ட பைகளை சுமப்பதும் கடினம்.

    அதேப்போல் நீங்கள் எடுத்துச்செல்லும் பணம், நகைகள், லேப்டாப்,போன்ற பொருட்களை, அனாவசியமான இடங்களில் வைக்காமல், பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

    அதற்காக நீங்கள் தனியே பூட்டுப்போட்டு சாவியை கையில் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

    அடுத்ததாக, நீங்கள் தங்கியுள்ள ஹோட்டல் அறையின் எண்ணினை ரகசியமாக வைத்துக்கொள்வது உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு உகந்ததாகும்.

    கிரெடிட்கார்டு முறைகேட்டினை தவிர்க்க, அதனை யாரும் பார்க்காதவாறும், புகைப்படம் எடுக்காதவாறும் பயன்படுத்துங்கள்.

    பணத்தினை எப்போதும் உங்கள் ஹான்ட்பேக்கில் வைத்திருப்பது நல்லது. ஒருவேளை அறையிலேயே வைக்கவேண்டுமெனில், திண்பண்டங்கள் இருந்த காலிப்பையில் போட்டு வையுங்கள். இவ்வாறு செய்தால், பணம் திருடு போகும் அபாயம் குறைவு.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயணம்
    லேப்டாப்

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    பயணம்

    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு இந்தியா
    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது உலகம்
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்

    லேப்டாப்

    தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை
    புதிய 15 சீரிஸ் ஐபோன்கள், M3 சிப் மேக்புக்குகளை வெளியிடவிருக்கும் ஆப்பிள் ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025