NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து ஒருவர் முழுதாக குணம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து ஒருவர் முழுதாக குணம்!
    இது ஒரு உள்நாட்டு புற்றுநோய் சிகிச்சையாகும்

    CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து ஒருவர் முழுதாக குணம்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 09, 2024
    03:39 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு புற்றுநோய் சிகிச்சையான இந்தியாவின் CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி, முதல் புற்றுநோயாளி குணப்படுத்தப்பட்டுள்ளார்.

    இது ஒரு உள்நாட்டு புற்றுநோய் சிகிச்சையாகும்.

    இது சமீபத்தில் மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) வணிக பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டது.

    இந்தியாவில் உள்ள சிகிச்சையானது புற்றுநோயை எதிர்த்துப் போராட நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மரபணு ரீதியாக மறுசீரமைப்பதாக அறியப்படுகிறது.

    இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்ட நோயாளி, டாக்டர் (கர்னல்) வி.கே. குப்தா.

    இவர் டெல்லியைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் நிபுணர் ஆவர்.

    இந்த சிகிச்சைக்காக வெறும் 42 லட்ச ரூபாய் செலவழித்ததாக கூறப்படுகிறது. இதுவே அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டால் ரூ. 4 கோடி செலவாகி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

    CAR-T செல் சிகிச்சை

    CAR-T செல் சிகிச்சை என்றால் என்ன?

    CAR-T செல் சிகிச்சை என்பது ஒரு வகை நோயெதிர்ப்பு சிகிச்சையாகும். இது புற்றுநோய் செல்களைத் தாக்குவதற்கு, நோயாளியின் T செல்களை மரபணு ரீதியாகப் மாற்றியமைக்கிறது.

    T செல்கள் என்பது ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்கள் ஆகும். அவை உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

    CAR-T செல் சிகிச்சையில், T செல்கள் நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்டு, சிமெரிக் ஆன்டிஜென் ஏற்பி (CAR) எனப்படும் சிறப்பு புரதத்தை வெளிப்படுத்த, ஆய்வகத்தில் மாற்றியமைக்கப்படுகின்றன.

    இந்த CAR புரதம் சேர்க்கப்பட்ட T செல்கள் நோயாளிக்கு மீண்டும் செலுத்தப்படுகிறது. அவை புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு எதிர்த்துப் போராட உதவுகிறது.

    இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை இப்போது கிடைக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புற்றுநோய்
    மருத்துவம்
    மருத்துவத்துறை
    மருத்துவ ஆராய்ச்சி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக நோய்த்தடுப்பு சிகிச்சை
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா

    மருத்துவத்துறை

    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  மத்திய அரசு
    தமிழ்நாட்டில் 4 இளம் மருத்துவர்கள் 48 மணிநேரத்தில் இறப்பு - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    நெக்ஸ்ட் தேர்வு கைவிடப்பட வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்  மு.க ஸ்டாலின்
    MBBS, BDS கலந்தாய்வு - 650 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு  பள்ளிக்கல்வித்துறை

    மருத்துவ ஆராய்ச்சி

    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் சமூக வலைத்தளம்
    சோயா பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் உடல் நலம்
    பிறந்த குழந்தைகளுக்கு முக்கியமாக செய்ய வேண்டிய 3 'ஸ்க்ரீனிங்' சோதனைகள் குழந்தை பராமரிப்பு
    புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர் ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025