NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?
    பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா

    பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 16, 2023
    04:29 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது வருங்கால வைப்புநிதித் திட்டங்களை, வங்கிகளும், வங்கியல்லாத மற்ற சில நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது.

    குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு வங்கியின் வட்டி மற்றும் பணவீக்கத்தை கடந்து லாபம் பெற வேண்டும் என்பவர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதியும் ஒரு தேர்வாக இருக்கிறது.

    ஆனால், பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு கோடி ரூபாய் வரை ஒருவரால் பெற முடியுமா?

    முதலில், பொது வருங்கால வைப்புநிதித் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு குறைந்தபட்சமாக ரூ.500-ல் இருந்து, ரூ.1.5 லட்சம் வரை ஒருவரால் முதலீடு செய்ய முடியும்.

    முதலீடு

    பொது வருவங்கால வைப்புநிதி முதிர்வும், நீட்டிப்புக் காலமும்: 

    பொது வருங்கால வைப்புநிதி திட்டமானது, 15 ஆண்டு முதிர்வு காலத்துடன் வழங்கப்படும் திட்டமாகும். எனினும், முதர்வு காலத்திற்குப் பின்பு உடனடியாக நம்முடைய முதலீட்டுப் பணத்தை வெளியே எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

    திட்டம் முதிர்வடைந்த பிறகு மேற்கொண்டு திட்ட காலத்தை ஐந்து, ஐந்து ஆண்டுகளாக எத்தனை முறை வேண்டுமானாலும், திட்ட காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.

    ஒருவேளை 15 ஆண்டு முதிர்வு காலத்திற்குப் பின்பு, திட்ட காலத்தை ஐந்தாண்டுகள் நீட்டிக்கும் பட்சத்தில், அந்த ஐந்து ஆண்டுகளில் நாம் முதலீடு செய்திருக்கும் பணத்தில் 60% மட்டும் அவசர காலத்தில் எடுத்துக் கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறது.

    முதிர்வு காலத்திற்குப் பின்பு திட்டத்தை நீட்டிப்பதன் மூலம், ஒரு கோடி வரையிலான மொத்தப் பணத்தை நாம் பெற வாய்ப்புகள் இருக்கிறது.

    முதலீடு

    ஒரு கோடி ரூபாய் பெறுவது எப்படி? 

    பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட ரூ.1.5 லட்சம் ரூபாயை 25 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், 25 ஆண்டுகள் முடிவில் ஒரு கோடி ரூபாய் பணத்தை நம்மால் பெற முடியும்.

    பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் அல்லது மாதத்திற்கு ரூ.8,334ஐ முதலீடு செய்வதன் மூலம், 25 ஆண்டுகால முடிவில் மொத்தமாக ரூ.1.03 கோடியை நாம் பெற முடியும்.

    கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல், பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மேற்கூறிய கணக்கீடானது, 25 ஆண்டுகளுக்கு 7.1% வட்டி என்ற அளவைக் கொண்டு கண்கிடப்பட்டிருக்கிறது.

    முதலீடு 

    வருமான வரி விலக்கு: 

    மேற்கூறிய கணக்கீட்டின் படி பொது வருங்கால வைப்புநிதித் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் என 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில், ஒட்டுமொத்தமா ரூ.37.50 லட்சத்தை நாம் முதலீடு செய்திருப்போம்.

    25 ஆண்டு கால முடிவில் 7.1% என்ற வட்டி விகித்தத்தின் கீழ், ரூ.65.58 லட்சம் வட்டியுடன் சேர்த்து ரூ.1.03 கோடி நமக்குக் கிடைக்கும்.

    பொது வருங்கால வைப்புநிதி கீழ் நாம் முதலீடு செய்யும் ரூ.1.5 லட்சம் ரூபாய் முதலீட்டிற்கு, வருமான வரி பிரிவு 80C-யின் கீழ் நம்மால் வருமான வரி விலக்கு பெற முடியும். மேலும், பொது வருமான வைப்புநிதி திட்ட முதிர்வுக்கு பின்பு கிடைக்கும் தொகையும் வருமான வரி விலக்கிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    முதலீட்டு வழிகள்:

    As individual can invest in following funds or scheme :

    Fixed deposit for 5 years,
    Life insurance scheme,
    Employee provident fund,
    public provident fund,
    national saving certificate,
    ULIP of UTI,
    ULIP of LIC of India

    and get deduction of Rs 1,50,000 from total income u/s 80c

    — Jenish Shah🇮🇳 (@Jenish2611) January 28, 2020
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முதலீடு
    வங்கிக் கணக்கு
    வட்டி விகிதம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    முதலீடு

    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    நிகர மதிப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? முதலீட்டு திட்டங்கள்
    புத்தக வாசிப்பு தந்த நம்பிக்கையில் பங்குச்சந்தை ஆலோசகரான நபரின் உண்மை கதை பங்கு சந்தை
    FTX தளத்தில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய நிஷாத் சிங் யார் இவர்? தொழில்நுட்பம்

    வங்கிக் கணக்கு

    சரசரவென உயரும் தங்கத்தின் விலை - ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,100ஐ தாண்டியது சென்னை
    ஜனவரி 1 முதல் புதிதாக அமல்படுத்தப்படும் சில விதிகள்; விவரங்கள் உள்ளே கார்
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி இந்தியா
    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன? இந்தியா

    வட்டி விகிதம்

    ஏன் PPF திட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது? 5 காரணங்கள்! வாழ்க்கை

    இந்தியா

    சட்டம் பேசுவோம்: தேசத்துரோக சட்டம் என்றால் என்ன? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்? சட்டம் பேசுவோம்
    INDvsPAK: தொடர் மழையின் காரணமாக ரிசர்வ் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது போட்டி! ஆசிய கோப்பை
    ஜி20 உச்சிமாநாட்டினால் இந்தியாவுக்கு கிடைத்த பலன்கள் என்ன? ஜி20 மாநாடு
    இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து வியட்நாமில் பேசிய அதிபர் ஜோ பைடன்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025