NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டது அதை தயாரித்த நிறுவனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டது அதை தயாரித்த நிறுவனம் 

    கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டது அதை தயாரித்த நிறுவனம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 30, 2024
    08:02 pm

    செய்தி முன்னோட்டம்

    அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியால் த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (டிடிஎஸ்) என்ற இரத்த உறைவுக் கோளாறு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், இந்த தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகளை விட இதனால் ஏற்படும் தீமைகள் அதிகம் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசியால், அரிதான மற்றும் தீவிரமான இரத்த உறைவு கோளாறு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் முதன்முறையாக நீதிமன்ற ஆவணங்களில் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்றும், ஐரோப்பாவில் வாக்ஸ்செவ்ரியா என்றும் விற்கப்பட்டது.

    இந்தியா 

    90 சதவீத இந்திய மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை தான் எடுத்துக்கொண்டனர் 

    இது மாற்றியமைக்கப்பட்ட சிம்பன்சி அடினோவைரஸ் ChAdOx1 ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் வெக்டர் தடுப்பூசி ஆகும்.

    சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) உடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் கோவிஷீல்டு, இந்திய நாட்டில் பரவலாக உபயோகிக்கப்பட்டு வரும் தடுப்பூசியாகும்.

    கிட்டத்தட்ட 90 சதவீத இந்திய மக்கள் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர்.

    "த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்(TTS) என்பது தடுப்பூசியால் தூண்டப்பட்ட இம்யூன் த்ரோம்போடிக் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புராவின்(VITTP) ஒரு பகுதியாக நடந்த தீவிர பாதகமான விளைவுகளில் ஒன்றாகும்." என்று தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஈஸ்வர் கிலாடா கூறியுள்ளார்.

    இந்த கோளாறு தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 50,000இல் ஒருவருக்கு(0.002 சதவீதம்) ஏற்படக்கூடும்.

    ஆனால் ஒரு பெரிய மக்கள்தொகையில், இது மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    கொரோனா தடுப்பூசிகள்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    கொரோனா

    கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்  ஜே.என்.1 வகை
    இந்தியாவில் மேலும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 636 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா

    கொரோனா தடுப்பூசிகள்

    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி
    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் இந்தியா
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! மகாராஷ்டிரா
    தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா; சுற்றுலாத்தலங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை கொடைக்கானல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025