NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் கைது

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது

    எழுதியவர் Sekar Chinnappan
    May 17, 2025
    06:00 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் உளவுத்துறைக்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், டிராவல் வித் ஜோ சேனலை நடத்தி வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை ஹிசார் போலீசார் கைது செய்துள்ளனர்.

    3,77,000 க்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட மல்ஹோத்ரா மீது அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், அவரது முதற்கட்ட வாக்குமூலத்தைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    விசாரணை இப்போது பொருளாதார குற்றப்பிரிவால் கையாளப்படுகிறது.

    நெட்வொர்க்

    பாகிஸ்தான் உளவுத்துறை நெட்வொர்க்கில் இணைந்தது எப்படி?

    ஹிசார் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர் சஞ்சய் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் படி, ஜோதி மல்ஹோத்ரா 2023 ஆம் ஆண்டு புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையரகத்தில் பணியாற்றும் எஹ்சான்-உர்-ரஹீம் என்ற டேனிஷ் உடன் தொடர்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    டேனிஷ் அவரை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து ரகசிய தளங்கள் மூலம் இவர்களுக்குள் தொடர்புகள் பரிமாறப்பட்டு வந்துள்ளன.

    ஜோதி மல்ஹோத்ரா 2023 ஆம் ஆண்டில் இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்று அலி எஹ்வான், ஷாகிர் மற்றும் ராணா ஷாபாஸ் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களைச் சந்தித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    அவர்களில் ஒருவருடன் பாலிக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது, இது ஆழமான ஈடுபாடு குறித்த கவலைகளை எழுப்பியது.

    ஹரியானா

    ஹரியானா மற்றும் பஞ்சாப்

    ஹரியானா மற்றும் பஞ்சாபில் செயல்படும் பாகிஸ்தானின் ஒரு பெரிய உளவு நெட்வொர்க்கில் ஜோதி மல்ஹோத்ரா பங்கு வகித்ததாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.

    முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், பாகிஸ்தான் ஹேண்ட்லர்களை ஆதரித்ததாகவும் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொதுமக்களின் கருத்தை நுட்பமாக பாதிக்க அவரது பரந்த சமூக ஊடக அணுகல் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றின் பின்னணியில் இந்த கைது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யூடியூபர்
    பாகிஸ்தான்
    இந்தியா
    கைது

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்
    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி

    யூடியூபர்

    கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல் கார்
    'காவாலா' பாடலுக்கு நடனமாடும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர்  ஜெயிலர்
    எஸ்கேப் ஆன TTF வாசன்; போலீஸ் வலைவீச்சு யூடியூப்
    யூட்யூப் பிரபலம் டிடிஎப் வாசனுக்கு அக்டோபர் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்  தமிழ்நாடு

    பாகிஸ்தான்

    '2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்': பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஔரங்கசீப் அகமது ஒப்புதல் வாக்குமூலம் பாகிஸ்தான் ராணுவம்
    ராவல்பிண்டி வரை எதிரொலித்த இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரம்; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ராஜ்நாத் சிங்
    இனியொருமுறை அத்துமீறினால்... பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மூலம் மோடி கொடுத்த வார்னிங் நரேந்திர மோடி
    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா

    இந்தியா

    இணையத்தில் உலவும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் இளம் தலைமுறையை உளவியல் ரீதியாக பாதிக்கின்றன: ஆய்வு இந்தியா vs பாகிஸ்தான்
    Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர்
    இந்தக் காரணங்களுக்காக தான் அமெரிக்கா இந்தியர்களுக்கு மாணவர் விசாக்களை மறுக்கிறதாம்! அமெரிக்கா
    'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி ஆபரேஷன் சிந்தூர்

    கைது

    'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது அல்லு அர்ஜுன்
    அல்லு அர்ஜுன் கைது: எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்?  அல்லு அர்ஜுன்
    நாடாளுமன்ற அமளிக்காக ராகுல் காந்தியை கைது செய்ய முடியுமா?  நாடாளுமன்றம்
    ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்த பகீர் சம்பவம்; இரண்டு பேர் பலி; 68 பேர் காயம் ஜெர்மனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025