NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரூ.22000 சம்பளத்திற்காக 50,000 பேர் விண்ணப்பம்: மும்பையில் வேலைக்கான நேர்காணலில் ஏற்பட்ட நெரிசல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரூ.22000 சம்பளத்திற்காக 50,000 பேர் விண்ணப்பம்: மும்பையில் வேலைக்கான நேர்காணலில் ஏற்பட்ட நெரிசல்
    இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

    ரூ.22000 சம்பளத்திற்காக 50,000 பேர் விண்ணப்பம்: மும்பையில் வேலைக்கான நேர்காணலில் ஏற்பட்ட நெரிசல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 17, 2024
    01:26 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையில் ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நடத்திய வாக்-இன் நேர்காணலுக்கு ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்கள் வந்ததால் நெரிசல் அதிகரித்தது.

    மும்பையின் கலினாவில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    முன்னதாக குஜராத்திலும் இது போன்ற தள்ளுமுள்ளு சம்பவம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.

    அதன் அதிர்ச்சி ஓய்வதற்குள் தற்போது மீண்டும் இது போன்ற வேலைவாய்ப்பு நேர்காணலில் அதிகரித்த மக்கள் கூட்டம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    ஏர் இந்தியா

    1800 காலி இடங்களுக்கு குவிந்த பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள்

    ஏர் இந்தியா நிறுவனத்தில், பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான 1,800 காலியிடங்களுக்கு சுமார் 50,000 பேர் வந்திருந்தனர்.

    இந்த பணிக்கு சம்பளம் ரூ.22,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், நெரிசல் போன்ற சூழ்நிலையைத் தடுக்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை டெபாசிட் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    ஏவியேஷன் இண்டஸ்ட்ரி எம்ப்ளாய்ஸ் கில்டின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் ஆப்ராம், ஆட்சேர்ப்பு செயல்முறை தவறாக நிர்வகிக்கப்பட்டதாகவும், 50,000 வேலை தேடுபவர்கள் நேர்காணலுக்கு வந்திருப்பதாகவும் கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    வைரலாகும் வீடியோ

    This is Mumbai's Kalina, where a massive crowd of job seekers emerged as the Air India Airport Services Ltd announced walk-in interviews.

    The situation soon went out of control and the candidates were asked to leave their CVs and vacate the area.#Mumbai #AIAirportServices pic.twitter.com/vZoLDf40iz

    — Vani Mehrotra (@vani_mehrotra) July 16, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மும்பை

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    மும்பை

    பாலஸ்தீன ஆதரவு பதிவை லைக் செய்ததால் மும்பை பள்ளி முதல்வர் பதவிநீக்கம் பாலஸ்தீனம்
    வீடியோ: மும்பையை கதிகலங்க வைத்த புழுதிப் புயல், கனமழை  கனமழை
    மும்பை விளம்பர பதாகை விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு இந்தியா
    ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் புற்றுநோயால் காலமானார் புற்றுநோய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025