NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது 
    153, 153A மற்றும் 505(1)(B) ஆகிய பிரிவுகளின் கீழ் சேஷாத்ரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

    தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 29, 2023
    12:27 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் வன்முறை மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறித்து ஆத்திரமூட்டும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று(ஜூலை 29) கைது செய்துள்ளது.

    பத்ரி சேஷாத்ரி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, மணிப்பூர் வன்முறை மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறித்து அவமதித்து பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    "உங்களால்(அரசால்) எதுவும் செய்ய முடியாவிட்டால், நாங்கள்(நீதிமன்றம்) செய்வோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சந்திரசூட்டை அங்கு துப்பாக்கியைக் கொடுத்து அனுப்புவோம். அவரால் அமைதியை மீட்டெடுக்க முடியுமா என்பதை பார்ப்போம்" என்று பத்ரி சேஷாத்ரி அந்த யூடியூப் பேட்டியில் பேசி இருக்கிறார்.

    எவ்க்கி

    இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும்  கண்டனம்

    மேலும், "மணிப்பூர் மலைப்பாங்கான மற்றும் சிக்கலான பகுதி. அதனால், அங்கு கொலைகள் நடக்கும். வன்முறையை தடுக்க முடியாது" என்று சேஷாத்ரி கூறியிருந்தார்.

    இந்த யூடியூப் பேட்டியை பார்த்த வழக்கறிஞர் கவியரசு, பத்ரி சேஷாத்ரிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து, 153, 153A மற்றும் 505(1)(B) ஆகிய பிரிவுகளின் கீழ் சேஷாத்ரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதனிடையே, பத்ரி சேஷாத்ரியை கைது செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    "இந்த ஊழல் நிறைந்த திமுக அரசு, சாமானிய மக்களின் கருத்தைக் கேட்க சக்தியின்றி கைதுகளை மட்டுமே நம்பியுள்ளது. ஊழல் நிறைந்த திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை அமல்படுத்துவது மட்டும்தான் தமிழக காவல்துறையின் வேலையா?" என்று அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    தமிழ்நாடு
    டி.ஒய்.சந்திரசூட்
    மணிப்பூர்

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    பாஜக

    ஆருத்ரா வழக்கு - நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப்பத்திரிக்கை தாக்கல்  சென்னை
    முத்தலாக் நடைமுறைக்கு முடிவுகட்ட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு  இந்தியா
    'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக இந்தியா
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    "அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்": முதலமைச்சர் ஸ்டாலின் ரெய்டு
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய்  சேலம்

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா

    மணிப்பூர்

    வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்கிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    மணிப்பூரில் ராகுல் காந்தியின் கான்வாய் தடுத்து நிறுத்தம், ஹெலிகாப்டரில் செல்ல முடிவு ராகுல் காந்தி
    மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி? முதல்வர் பைரேன் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் மத்திய அரசு
    "இதயம் நொறுங்கியது" : மணிப்பூர் மக்களை சந்தித்த பிறகு ராகுல் காந்தி உருக்கம் ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025