NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள் 
    பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 07, 2023
    03:53 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் இன்று(ஜூன் 7) விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் நான்கு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை கேட்க விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று காலை அவர்களை சந்தித்தார்.

    details

    மல்யுத்த வீரர்கள் அமைச்சரிடம் கோரிய 5 கோரிக்கைகள் பின்வருமாறு:-

    1. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.

    2. பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக்கூடாது.

    3. மல்யுத்த அமைப்பிற்கு "சுதந்திரமான மற்றும் நியாயமான" முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    4. ஏப்ரல் 28-ம் தேதி ஜந்தர் மந்தரில் வைத்து சட்ட ஒழுங்கை மீறியதாகக் கூறி மல்யுத்த வீரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR ரத்து செய்யப்பட வேண்டும்.

    5. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும்.

    ஐந்து நாட்களில் மல்யுத்த வீரர்களுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். கடந்த சனிக்கிழமை மல்யுத்த வீரர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மல்யுத்த வீரர்கள்
    பிரிஜ் பூஷன் சரண் சிங்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    இந்தியா

    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  உயர்நீதிமன்றம்
    ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு பிரதமர் மோடி
    வெளிநாட்டில் இருக்கும் மகன்/மகளுக்கு பணம் அனுப்புவது எப்படி? இந்தியா
    அதிக வட்டி விகிதத்தைக் கொண்ட அரசின் சேமிப்புத் திட்டங்கள்! மத்திய அரசு

    மல்யுத்த வீரர்கள்

    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி இந்தியா
    மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை! கிரிக்கெட் செய்திகள்
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  அமித்ஷா

    பிரிஜ் பூஷன் சரண் சிங்

     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025