NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி
    மூங்கில் தடைகளின் மறுசுழற்சி விகிதம் 50-70 சதவீதம் என்றும், எஃகு தடைகளின் மறுசுழற்சி விகிதம் 30-50 சதவீதமாகும்

    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 04, 2023
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் சந்திராபூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்புச் சுவர் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று(மார்-4) தெரிவித்தார்.

    இப்படி ஒரு விபத்து தடுப்பு கட்டப்படுவது உலகில் இதுவே முதல்முறை என்றும் அவர் கூறியுள்ளார்.

    நாட்டிற்கும் அதன் மூங்கில் துறைக்கும் இது ஒரு "குறிப்பிடத்தக்க சாதனை" என்று கூறிய நிதின் கட்கரி, இந்த விபத்து தடுப்பானது எஃகுக்கு சரியான மாற்று என்றும் சுற்றுச்சூழல் கவலைகளை இது நிவர்த்தி செய்கிறது என்றும் கூறியுள்ளார்.

    "உலகின் முதல் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்பு, வாணி-வரோரா நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டதன் மூலம் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான ஒரு அசாதாரண சாதனை படைக்கப்பட்டுள்ளது." என்று கட்கரி கூறியுள்ளார்.

    இந்தியா

    சுற்றுசூழலுக்கு ஏற்ற தடுப்புகள்: நிதின் கட்காரி

    மேலும், இந்த மூங்கில் விபத்து தடுப்புச்சுவருக்கு "பஹு பல்லி" என பெயரிடப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

    "இது இந்தூரில் இருக்கும் நேஷனல் ஆட்டோமோட்டிவ் டெஸ்ட் டிராக்குகள் (NATRAX) போன்ற அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்வேறு நிறுவனங்களில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கூடுதலாக, இது இந்திய சாலை காங்கிரஸால் அங்கீகாரம் செய்யப்பட்டது." என்று நிதின் கட்காரி இன்னொரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

    மேலும், மூங்கில் தடைகளின் மறுசுழற்சி விகிதம் 50-70 சதவீதம் என்றும், எஃகு தடைகளின் மறுசுழற்சி விகிதம் 30-50 சதவீதம் என்றும் கட்கரி கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    இந்தியா
    நிதின் கட்காரி

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா

    இந்தியா

    உலக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி மோடி
    டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்! செயற்கை நுண்ணறிவு
    பிரதமர் மோடியை சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உலகம்
    இந்த மார்ச் மாதத்தில் வெளியாகும் சூப்பர் மாடல் கார்கள்! என்ன எதிர்பார்க்கலாம்? கார்

    நிதின் கட்காரி

    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு சுற்றுச்சூழல்
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025