Page Loader
தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2024
09:28 am

செய்தி முன்னோட்டம்

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையைப் பெற்று மூன்றாவது ஐந்தாண்டு பதவிக் காலத்துக்கு களம் அமைத்துக் கொடுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த அவருடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவை மிக உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு பிரதமர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அவருக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "பாரத்-பூடான் உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வலுவடையும்" என்றார். நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா'-வும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் வாழ்த்து

இலங்கை, மாலத்தீவு அதிபர்கள் வாழ்த்து 

இந்தியாவுடனான இராஜதந்திர மோதலில் ஈடுபட்டுள்ள மாலத்தீவின் ஜனாதிபதி மொஹமது முய்ஸு, "2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற பிரதமர் நரேந்திர மோடிக்கும், BJP மற்றும் BJP தலைமையிலான NDA-க்கும் வாழ்த்துக்கள். இரு நாடுகளுக்கும் பகிரப்பட்ட ஸ்திரத்தன்மையைப் பின்தொடர்வதில், பகிரப்பட்ட நலன்களை முன்னேற்றுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறோம்" என்றார். இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு தனது நாடு, மிக நெருங்கிய அண்டை நாடாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

இலங்கை அதிபர் வாழ்த்து 

ட்விட்டர் அஞ்சல்

ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து

ட்விட்டர் அஞ்சல்

நேபாள பிரதமர் வாழ்த்து