NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உலக பாரம்பரிய தினம் 2023: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட புராதன சின்னங்கள்
    உலக பாரம்பரிய தினம் 2023: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட புராதன சின்னங்கள்
    இந்தியா

    உலக பாரம்பரிய தினம் 2023: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட புராதன சின்னங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    April 18, 2023 | 03:27 pm 1 நிமிட வாசிப்பு
    உலக பாரம்பரிய தினம் 2023: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட புராதன சின்னங்கள்
    இந்தியாவில் புனரமைக்கப்பட்ட புராதன சின்னங்கள்

    பாரம்பரிய சின்னங்கள் அல்லது புராதன சின்னங்கள், ஒரு இடத்தின் வரலாற்றை நினைவூட்டுவதுடன், அந்த நாட்டின் வளமான பாரம்பரியத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. அந்த சின்னங்களை சுற்றி இருக்கும் வரலாற்று கதைகள், சுற்றுலாவாசிகளை ஈர்க்கும். அத்தகைய நினைவு சின்னங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இந்த உலக பாரம்பரிய தினத்தில், இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட முக்கியமான வரலாற்று சின்னங்களை பற்றி காண்போம்: தாஜ்மஹால்: ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு பழமையான தாஜ்மஹால், 'காதலின் நினைவுச்சின்னம்' என்று அழைக்கப்படுகிறது. முகலாய பேரரசர் ஷாஜஹானால் தனது அன்பு மனைவி மும்தாஜ்காக, 1631-இல் கட்டப்பட்டது. காற்றுமாசு காரணமாக, அதன் வெள்ளை பளிங்கு கற்கள், மஞ்சள் நிறமாக மாறத்துவங்கியது. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் நடவடிக்கைகள் காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர், தாஜ்மஹால் புனரமைக்கப்பட்டது

    நினைவு சின்னங்களை பராமரிக்க ASI நடவடிக்கைகள் எடுத்து வருகிறது 

    செங்கோட்டை: செங்கோட்டை அல்லது லால் கிலா, பல முகலாய பேரரசர்களின் வசிப்பிடமாக செயல்பட்ட ஒரு வரலாற்று கோட்டையாகும். இதுவும் ஷாஜஹானால், 1638 இல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 70-80% கோட்டை அழிக்கப்பட்டது என்றாலும், அதன் ஒரு சில பகுதிகளை, அவர்கள் ராணுவ தளவாடங்களுக்கு பயன்படுத்தினர். சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய அரசாங்கம் அதை மீட்டெடுக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. கடைசியாக 2019-ஆம் ஆண்டில், புனரமைக்கப்பட்டது. சார் மினார்: 1591-இல் கட்டப்பட்ட சார் மினார், ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று அடையாளமாகும். இதன் வெளிப்புற பிளாஸ்டர் உறிய துவங்கியதால், 2021-ஆம் ஆண்டில், ASI பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டது. ஜாலியன் வாலா பாக்: சுதந்திர போராட்டத்தின் நினைவாக இருக்கும் இந்த சின்னத்தை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    உலகம்
    சுற்றுலா

    இந்தியா

    இந்திய மலையேற்ற வீரர் மாயம்! தேடுதலில் இறங்கிய மீட்புப் படை  நேபாளம்
    சூடான் பிரச்சனை: சூடானில் சிக்கி தவிக்கும் 31 இந்தியர்கள் கர்நாடகா
    மன உளைச்சலில் உள்ளேன்: பிச்சைக்காரன் 2 தடைக்கு விஜய் ஆண்டனி வேதனை!  கோலிவுட்
    ஆப்பிளின் மும்பை BKC ஸ்டோரில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?  ஆப்பிள்

    உலகம்

    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம் அமெரிக்கா
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள் வட கொரியா
    மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம்  உலக செய்திகள்

    சுற்றுலா

    ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா? சுற்றுலாத்துறை
    கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள்  கடற்கரை
    கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்   ஆரோக்கியம்
    இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா! இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023