NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி?
    1780ஆம் ஆண்டு வெள்ளையர்களை எதிர்க்க திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கைக்கு புறப்பட்டார் வேலு நாச்சியார்.

    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி?

    எழுதியவர் Sindhuja SM
    Aug 13, 2023
    07:01 pm

    செய்தி முன்னோட்டம்

    வரலாற்று நிகழ்வு: சுதந்திரத்திற்காக போராடிய ராணி வேலு நாச்சியாரின் வலது கையாக செயல்பட்டு, தன் நாட்டுக்காக உயிரை மாய்த்து கொண்ட பெண் போராளி குயிலியை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?

    18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள் இந்திய துணை கண்டத்தின் பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றி கொண்டிருந்தனர்.

    1772இல் அவர்கள் சிவகங்கையை முற்றுகையிட்டனர்.

    அப்போது நடந்த போரில், வேலு-நாச்சியாரின் கணவரும் சிவகங்கையின் அரசருமான முத்து வடுகநாதரையும், அவர்களது அன்பு மகள் கௌரி நாச்சியாரையும் வெள்ளையர்கள் கொன்றனர்.

    அதன் பிறகு, வேலு நாச்சியாரையும் கொல்ல அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அப்போது, வேலு நாச்சியாருடன் துணை நின்றவர் தான் வீரமங்கை குயிலி.

    போருக்கு பிறகு, சிவகங்கை அரண்மனை வெள்ளையர்களின் கோட்டையானது. வெள்ளையர்கள் தங்களது ஆயுதங்களை அங்கு பதுக்கி வைத்திருந்தனர்.

    ஞிஇஜிசினிவ்

    தன் உயிரை மாய்த்து வெள்ளையர்களை சாய்த்த வீரமங்கை குயிலி

    இதனை அறிந்து கொண்ட வேலு நாச்சியார், அந்த ஆயுத கிடங்கை அழிக்க குயிலியுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.

    1780ஆம் ஆண்டு மருது சகோதரர்களுடன் வெள்ளையர்களை எதிர்க்க திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கைக்கு புறப்பட்டார் வேலு நாச்சியார்.

    அவருடன் ஒரு பெரும் பெண்கள் படை இருந்தது. பெண்கள் என்ன செய்துவிட போகிறார்கள் என்ற எண்ணத்தில் வெள்ளையர்களும் மாறு வேடத்தில் இருந்த பெண் போராளிகளை கண்டு கொள்ளவில்லை.

    அந்த பெண் போராளிகள் அரண்மைக்குள் இருந்த ராஜ ராஜேஸ்வரி கோவிலுக்குள் செல்வது போல் நடித்து, வெள்ளையர்களின் ஆயுத கிடங்கை கண்டுபிடித்தனர்.

    அப்போது, வீரமங்கை குயிலி தன் மீது எண்ணெயை ஊற்றி கொண்டு ஆயுத கிடங்கிற்குள் குதித்து தன் உயிரை மாய்த்து கொண்டார். வெள்ளையர்களின் ஆயுத கிடங்கும் சுக்கு நூறானது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவகங்கை
    தமிழ்நாடு
    சுதந்திர தினம்
    வரலாற்று நிகழ்வு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சிவகங்கை

    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
    தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு
    சிவகங்கை கீழடி அருங்காட்சியகத்தில் என்னென்ன இருக்கிறது என ஓர் பார்வை தமிழ்நாடு
    கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா? தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது  பாஜக
    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு  காவல்துறை
    திருவள்ளூர் - டயர் உதிரிப்பாக தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து காவல்துறை
    அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சிவகங்கை

    வரலாற்று நிகழ்வு

    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 2 காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025