NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார்

    ஈரான் சிறைபிடித்த கப்பலில் இருந்த கேரள பெண் இந்தியா திரும்பினார்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2024
    05:49 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏப்ரல் 13 ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் புரட்சிகர காவலர்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலில் இருந்த ஒரு இந்திய மாலுமி பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததாக வெளியுறவு அமைச்சகம்(MEA) இன்று தெரிவித்துள்ளது.

    "ஈரான் சிறைபிடித்த எம்.எஸ்.சி ஏரீஸ் என்ற கொள்கலன் கப்பலின் இந்தியக் குழு உறுப்பினர்களில் ஒருவரான கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த இந்திய டெக் கேடட் ஆன் டெஸ்ஸா ஜோசப், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கினார்." என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதிவிட்டுள்ளார்.

    தெஹ்ரானில் உள்ள இந்திய மிஷன் மற்றும் ஈரானிய அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் அவர் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 

    ஈரானிய அதிகாரிகளுடன் இந்தியா தொடர்பில் இருப்பதாக தகவல் 

    "தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இந்த விஷயத்தை கையாண்டு வருகிறது. அந்த கொள்கலன் கப்பலுடன் சிக்கிய மீதமுள்ள 16 இந்திய பணியாளர்களுடன் தொடர்பில் உள்ளது. அந்த குழு உறுப்பினர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர் மற்றும் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளனர்" என்று MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மீதமுள்ள குழு உறுப்பினர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக ஈரானிய அதிகாரிகளுடன் இந்தியாவும் தொடர்பில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் அப்துல்லாஹியனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை

    ஈரான்

    தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் லெபனான்
    செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல் ஏமன்
    இஸ்ரேலிய உளவுத்துறை  ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான்  இஸ்ரேல்
    காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல் பிரதமர் மோடி

    இந்தியா

    "இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம்  பிரதமர் மோடி
    "குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீம்களை எப்படி பாதிக்க போகிறதோ': அமெரிக்கா செனட்டர் கவலை  அமெரிக்கா
    தொடர்ந்து 7வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வு; இந்தியா எந்த இடம் தெரியுமா? பின்லாந்து
    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025