NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்டில் நிலச்சரிவு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்டில் நிலச்சரிவு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் பலி 

    உத்தரகாண்டில் நிலச்சரிவு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 27, 2024
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன.

    இதனால், இடிபாடுகளுக்கு அடியில் 42 வயது பெண்ணும், அவரது டீனேஜ் மகளும் புதைக்கப்பட்டனர்.

    டோலி கிராமத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்த சரிதா தேவி மற்றும் 15 வயது அங்கிதாவின் உடல்களை மீட்புப் படையினர் வெளியே எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அவர்களது வீட்டின் பின்புறம் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக மாவட்ட ஆட்சியர் (டிஎம்) மயூர் தீட்சித் கூறியுள்ளார்.

    இந்தியா 

    கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் மக்கள் கடும் அவதி 

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார்.

    "டெஹ்ரி மாவட்டத்தில் புத்தகேதார் அருகே உள்ள டோலி கிராமத்தில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் குறித்து சோகமான செய்தி கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும், அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, "என்று முதல்வர் ட்விட்டரில் பஹிவிட்டுள்ளார்.

    புதகேதாரில் உள்ள பல கடைகள் தர்மகங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன, மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பல பாலங்களையும் சேதப்படுத்தியது. ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    உத்தரகாண்ட்

    7வது நாளாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி: சிக்கியுள்ள 41 தொழிலாளர்ளுக்கு என்ன ஆகும்? விபத்து
    உத்தரகாண்ட் சுரங்கபாதையில் சிக்கியுள்ள 41 பேரை மீட்க இன்னும் 4-5 நாட்கள் ஆகும் என்று தகவல் மத்திய அரசு
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் 41 பேரை மீட்க 5 அடக்கு திட்டம் அறிமுகம்  விபத்து
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியானது விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025