NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பயங்கரவாத விசாரணையாக மாறுமா காலிஸ்தான் தலைவர் பிரச்சனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயங்கரவாத விசாரணையாக மாறுமா காலிஸ்தான் தலைவர் பிரச்சனை
    அம்ரித்பால் சிங்கின் முக்கிய உதவியாளர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    பயங்கரவாத விசாரணையாக மாறுமா காலிஸ்தான் தலைவர் பிரச்சனை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 20, 2023
    04:10 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததால் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்குக்கு எதிராக ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வழக்கை பயங்கரவாத விசாரணையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஏழு உதவியாளர்களை விசாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், நம்பர் 1 குற்றவாளியாக காலிஸ்தான் தலைவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், அம்ரித்பால் சிங்கின் முக்கிய உதவியாளர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அசாமில் உள்ள திப்ருகாருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இந்தியா

    மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து எடுத்திருக்கும் ரகசிய நடவடிக்கைகள்

    அந்த நான்கு பேர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள எந்தச் சிறையிலும் சந்தேக நபர்களை காவலில் வைக்க காவல்துறையை அனுமதிக்கும்.

    பஞ்சாப்பை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசு மற்றும் அசாமை ஆளும் பாஜக காட்சி ஆகியவை இணைந்து நடத்தும் மிக ரகசியமான நடவடிக்கை இது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏற்றிச் செல்ல இந்திய விமானப்படை விமானம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது, இந்த விஷயத்தில் மத்திய அரசு கொண்டிருக்கும் ஈடுபாட்டை காட்டுகிறது.

    இதுவரை, அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள் 112 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 'வாரிஸ் பஞ்சாப் டி' குழுவைச் சேர்ந்த பலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை கனடா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    இந்தியா

    TCSஸில் இருந்து பதவி விலகினார் ராஜேஷ் கோபிநாதன்: புதிய CEO நியமனம் இந்தியா
    இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்தால் கடலில் ஆர்ப்பாட்டம் செய்யுமாறு இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு இலங்கை
    ரூ. 40,000 வருமானம் தரும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் - உயரும் வட்டி! சேமிப்பு திட்டங்கள்
    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025