NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்
    அம்ரித்பால் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு G20 நிகழ்வு முடியும் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023
    06:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தீவிர சீக்கிய போதகரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை துரத்தி சென்று பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.

    அம்ரித்பால், ஜலந்தரின் ஷாகோட் தாலுகாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த தனிப்படையினர் அடங்கிய சிறப்புக் குழு, பிரிவினைவாதத் தலைவரின் கார்களைப் பின்தொடர்ந்து சென்று அவரை கைது செய்தது.

    அம்ரித்பால் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு G20 நிகழ்வு முடியும் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது.

    கலவரம் நடந்துவிட்ட கூடாது என்பதற்காக, அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அம்ரித்பாலின் சொந்த கிராமமான ஜல்லுபூர் கைராவுக்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் கிராமத்திற்கு வெளியே காவலுக்கு நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப்

    யாரிந்த அம்ரித்பால் சிங்?

    அம்ரித்பால் சிங் ஒரு தீவிர போதகர் மற்றும் பிரிவினைவாதி ஆவார். கடந்த மாதம், தனது முக்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இவர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது.

    பஞ்சாபில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த தீவிர பிரிவினைவாத தலைவரை, ஆயுதம் ஏந்திய உதவியாளர்கள் இல்லாமல் பார்க்கவே முடியாது.

    கடந்த ஆண்டு பிப்ரவரியில் சாலை விபத்தில் இறந்த நடிகரும் ஆர்வலருமான தீப் சித்துவால் தொடங்கப்பட்ட "வாரிஸ் பஞ்சாப் தே" என்ற தீவிர அமைப்பிற்கு இவர் தலைவர் ஆவார்.

    இவரது இந்த அமைப்பு சீக்கியர்களுக்கு 'காலிஸ்தான்; என்ற தனி தேசம் வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி உலகம்
    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI ஆம் ஆத்மி
    பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - நோபல் குழுவின் துணை தலைவர் பிரதமர் மோடி
    அலுவலகம் வந்து பணிபுரிபவர்களே சிறப்பானவர்கள் - மார்க் ஜுக்கர்பெர்க் தகவல்! மெட்டா

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை இந்தியா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025