NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்
    இந்தியா

    கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்

    கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்
    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023, 06:12 pm 1 நிமிட வாசிப்பு
    கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங்
    அம்ரித்பால் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு G20 நிகழ்வு முடியும் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது.

    தீவிர சீக்கிய போதகரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை துரத்தி சென்று பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித்பால், ஜலந்தரின் ஷாகோட் தாலுகாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, ​​ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த தனிப்படையினர் அடங்கிய சிறப்புக் குழு, பிரிவினைவாதத் தலைவரின் கார்களைப் பின்தொடர்ந்து சென்று அவரை கைது செய்தது. அம்ரித்பால் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு G20 நிகழ்வு முடியும் வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது. கலவரம் நடந்துவிட்ட கூடாது என்பதற்காக, அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அம்ரித்பாலின் சொந்த கிராமமான ஜல்லுபூர் கைராவுக்கு வெளியே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் கிராமத்திற்கு வெளியே காவலுக்கு நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யாரிந்த அம்ரித்பால் சிங்?

    அம்ரித்பால் சிங் ஒரு தீவிர போதகர் மற்றும் பிரிவினைவாதி ஆவார். கடந்த மாதம், தனது முக்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இவர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது. பஞ்சாபில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த தீவிர பிரிவினைவாத தலைவரை, ஆயுதம் ஏந்திய உதவியாளர்கள் இல்லாமல் பார்க்கவே முடியாது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் சாலை விபத்தில் இறந்த நடிகரும் ஆர்வலருமான தீப் சித்துவால் தொடங்கப்பட்ட "வாரிஸ் பஞ்சாப் தே" என்ற தீவிர அமைப்பிற்கு இவர் தலைவர் ஆவார். இவரது இந்த அமைப்பு சீக்கியர்களுக்கு 'காலிஸ்தான்; என்ற தனி தேசம் வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    இந்தியா

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து ராகுல் காந்தி
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்

    பஞ்சாப்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    அம்ரித்பால் சிங் தப்பி செல்லும் போது பதிவான சிசிடிவி வீடியோ இந்தியா
    'அம்ரித்பால் தப்பிக்கும் வரை 80,000 போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்': உயர்நீதிமன்றம் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023