NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு
    இன்று, அம்ரித்பாலின் ஆறு உதவியாளர்கள் ஜலந்தரில் கைது செய்யப்பட்டனர்

    பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023
    04:49 pm

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் ஆதரவாளரும் பிரிவினைவாதத் தலைவருமான அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் தொடங்கி இருப்பதால், பஞ்சாபில் இணைய சேவைகள் நாளை(மார் 19) வரை நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தீவிர சீக்கிய தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங் கடந்த சில வாரங்களாக பஞ்சாபில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    கடந்த மாதம் அம்ரித்பாலின் உதவியாளர் ஒருவரை விடுவிக்கக் கோரி அமிர்தசரஸ் புறநகரில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

    இன்று, அம்ரித்பாலின் ஆறு உதவியாளர்கள் ஜலந்தரில் கைது செய்யப்பட்டதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

    இந்தியா

    குடிமக்கள் பீதியடைய வேண்டாம்: பஞ்சாப் காவல்துறை

    'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவர் அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் சிலர், போலீசார் தங்களை துரத்துவதாக கூறி சில வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

    அவர்கள் பகிர்ந்த ஒரு வீடியோவில் அமிரித்பால் ஒரு வாகனத்தின் மீது உட்கார்ந்திருப்பதை காண முடிந்தது. அப்போது ஒரு ஆதரவாளர் 'பாய் சாப்'-ஐ(அம்ரித்பால்) போலீஸ்காரர்கள் துரத்துகிறார்கள் என்று கூறுவதும் அந்த வீடியோவில் கேட்டது.

    பஞ்சாபில் நாளை வரை இணைய சேவைகள் முடக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    "அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க பஞ்சாப் காவல்துறை செயல்பட்டு வருகிறது. குடிமக்கள் பீதியடைய வேண்டாம். போலி செய்திகள் அல்லது வெறுப்பு பேச்சுகளை பரப்ப வேண்டாம்." என்று பஞ்சாப் காவல்துறை ட்விட்டரில் கேட்டு கொண்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப்
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை இந்தியா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 754 புதிய கொரோனா பாதிப்புகள் கொரோனா
    இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி உலகம்
    மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI ஆம் ஆத்மி
    பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - நோபல் குழுவின் துணை தலைவர் பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025