NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு
    இந்தியா

    பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு

    பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு
    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023, 04:49 pm 1 நிமிட வாசிப்பு
    பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு
    இன்று, அம்ரித்பாலின் ஆறு உதவியாளர்கள் ஜலந்தரில் கைது செய்யப்பட்டனர்

    காலிஸ்தான் ஆதரவாளரும் பிரிவினைவாதத் தலைவருமான அம்ரித்பால் சிங்கை கைது செய்வதற்கான நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் தொடங்கி இருப்பதால், பஞ்சாபில் இணைய சேவைகள் நாளை(மார் 19) வரை நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிர சீக்கிய தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங் கடந்த சில வாரங்களாக பஞ்சாபில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் அம்ரித்பாலின் உதவியாளர் ஒருவரை விடுவிக்கக் கோரி அமிர்தசரஸ் புறநகரில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். இன்று, அம்ரித்பாலின் ஆறு உதவியாளர்கள் ஜலந்தரில் கைது செய்யப்பட்டதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.

    குடிமக்கள் பீதியடைய வேண்டாம்: பஞ்சாப் காவல்துறை

    'வாரிஸ் பஞ்சாப் டி' தலைவர் அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் சிலர், போலீசார் தங்களை துரத்துவதாக கூறி சில வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். அவர்கள் பகிர்ந்த ஒரு வீடியோவில் அமிரித்பால் ஒரு வாகனத்தின் மீது உட்கார்ந்திருப்பதை காண முடிந்தது. அப்போது ஒரு ஆதரவாளர் 'பாய் சாப்'-ஐ(அம்ரித்பால்) போலீஸ்காரர்கள் துரத்துகிறார்கள் என்று கூறுவதும் அந்த வீடியோவில் கேட்டது. பஞ்சாபில் நாளை வரை இணைய சேவைகள் முடக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க பஞ்சாப் காவல்துறை செயல்பட்டு வருகிறது. குடிமக்கள் பீதியடைய வேண்டாம். போலி செய்திகள் அல்லது வெறுப்பு பேச்சுகளை பரப்ப வேண்டாம்." என்று பஞ்சாப் காவல்துறை ட்விட்டரில் கேட்டு கொண்டது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    இந்தியா

    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு தமிழ்நாடு
    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன மத்திய பிரதேசம்
    இந்தியாவில் டெக்னோவின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் - எப்போது வெளியீடு! ஸ்மார்ட்போன்
    இந்திய விற்பனையில் கலக்கும் சிட்ரோன் சி3 காரின் ஏற்றுமதி தொடக்கம்! சிட்ரோயன்

    பஞ்சாப்

    காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாளை விடுதலை இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் இந்தியா
    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023