NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுக்கடைகளை மாட்டு கொட்டகையாக மாற்றுவோம்: பாஜகவின் உமாபாரதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுக்கடைகளை மாட்டு கொட்டகையாக மாற்றுவோம்: பாஜகவின் உமாபாரதி
    "மதுஷாலா மே கவுஷாலா" என்ற திட்டத்தை ஆரம்பிக்க போவதாக பாஜக தலைவர் பேச்சு

    மதுக்கடைகளை மாட்டு கொட்டகையாக மாற்றுவோம்: பாஜகவின் உமாபாரதி

    எழுதியவர் Sindhuja SM
    Feb 02, 2023
    10:53 am

    செய்தி முன்னோட்டம்

    மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான உமாபாரதி, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு மது அருந்துவதே காரணம் என்று பேசினார்.

    மேலும், விதிகளை மீறி செயல்படும் மதுபானக் கடைகளை மாட்டு கொட்டகையாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "மதுஷாலா மே கவுஷாலா"(மதுபானக் கடைகளுக்குள் மாட்டு கொட்டகைகள்) என்ற திட்டத்தை ஆரம்பிக்க போவதாக கூறினார்.

    பல நாட்களாகவே அரசின் மதுக் கொள்கைக்கு எதிராக உமாபாரதி தனது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறார்.

    சென்ற மாதம், மத்தியப் பிரதேசத்தின் மதுக்கொள்கை குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதமும் எழுதியிருந்தார்.

    பாஜக

    மதுக்கடைகளை மாற்றத் தொடங்குவேன்: பாரதி

    அயோத்தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதி, நிவாரி மாவட்டத்தின் ஓர்ச்சாவில் உள்ள புகழ்பெற்ற ராம் ராஜா சர்க்கார் கோயிலுக்கு அருகில் இருக்கும் மதுபானக் கடை சட்டவிரோதமானது என்று செவ்வாய்க்கிழமை(ஜன 31) தெரிவித்தார்.

    மதுபானக் கொள்கைக்காகக் காத்திருக்காமல், விதிகளை மீறி நடத்தப்படும் மதுபானக் கடைகளை மாட்டு கொட்டகைகளாக மாற்றத் தொடங்குவேன் என்று பாரதி கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    "யார் என்னைத் தடுக்கத் துணிகிறார்கள் என்று பார்க்கிறேன்.. மதுபானக் கடைகளில் மாடுகளுக்கு உணவளித்து, தண்ணீர் காட்டுவேன்" என்றும் பாரதி கூறியுள்ளார்.

    மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு மது அருந்துவதும் ஒரு காரணம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பாஜக

    சமீபத்திய

    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்

    இந்தியா

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து மத்திய பிரதேசம்
    இந்தியாவின் சீரம் நிறுவனம் - கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி முதல்முறையாக அறிமுகம் ஆரோக்கியம்
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் திரௌபதி முர்மு

    பாஜக

    "கூர்மையான ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள்": மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி இந்தியா
    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    சென்னையில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர்கள் திமுக
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025